பிற கிரகங்களுக்கு எளிதான பயணம்-4

ஜடத்திற்கு சிருஷ்டிக்கும் சக்திகிடையாது. ஜீவ சக்தியால் இயக்கப்படுவதால்தான் ஜடப்பொருள்கள் உண்டாக்கப்படுகின்றன. பண்படாத நிலையில் ஜடமானது, உன்னத உயிரின் மறைச்சக்தியேயாகும். ஒரு சக்தியைப்பற்றி ஆராய்கையில் அந்தச் சக்தியின் மூலத்தை அறியவேண்டுவது இயற்கையே. உதாரணமாக, மின்சாரத்தைப்பற்றி நாம் எண்ணும்போதே மின்சார உற்பத்தி செய்யும் மின்நிலையம் நம் நினைவிற்கு வருகிறது. சக்தி மட்டும் தனியாக இயங்குதல் இயலாது. ஒரு உயர்ந்த உயிரின் கட்டுப்பாடுக்கடங்கியதே சக்தி. உதாரணமாக நெருப்பை எடுத்துக்கொண்டால் அது 'ஒளி, வெப்பம்' என்று சக்திகளை உடையதாகும். நெருப்பிலிருந்து தனியாக ஒளியும், வெப்பமும் சுயமாக இயங்கக்கூடியவை அல்ல. அதுபோலவே உன்னத, தாழ்ந்த சக்திகள் ஒரு உற்பத்தி தானமாக எல்லாமறிந்த பரம புருஷனாகத்தான் வழியுண்டு.
வேதங்களில் பரம சத்தியம் அல்லது உன்னதமான உயிர்சக்தியானது, "பகவான்" என்றழைக்கப்படுகின்றது. எல்லாச் சக்திகளின் ஊற்றுமூலமான சிறந்த உயிர் என்பது இதன் பொருள்.
நவீன விஞ்ஞானிகள் கட்டுப்பட்ட இரு சக்திகளைக் கண்டுபிடித்திருப்பது விஞ்ஞான முன்னேற்றத்தில் முதல்படி என்றே கொள்ளவேண்டும். ஜட அணு, எதிர் அணு என்று அவர்கள் இதனை அழைக்கிறார்கள்.

சேதனம்
சேதனவஸ்து எவ்வாறு விளக்கப்படலாம்?
ஜடப்பொருட்கள், ஜட அணுக்களைப்பற்றி நமக்கு அனுபவமிருக்கிறது. ஆனால் சேதன அங்கங்களைப்பற்றி மிகுந்த அனுபவமில்லை...
"சேதன அங்கமானது, ஜட உடலின் உள்ளேயே அமைந்துள்ளது. இதன் காரணத்தினாலேயே, ஸ்தூல உடலானது இளநிலையிலிருந்து, யுவநிலைக்கும், யுவநிலையிலிருந்து முதுநிலைக்கும், பிறகு சேதனம் முதிய உடலைவிட்டு போகும்போது ஜடம் செயலற்றதாகவும் ஆகின்றது. சேதனமானது வேறு தகுந்த ஸ்தூல உடலை அடைகிறது" என கீதை சேதனத்தின் தன்மையை பற்றி விவரிக்கிறது.


-----
பிற கிரகங்களுக்கு எளிதான பயணம்-3
பிற கிரகங்களுக்கு எளிதான பயணம்-2
பிற கிரகங்களுக்கு எளிதான பயணம்-1
-----