யோகம் - என்றால் என்ன?

'யோகம்' என்பது 'யுஜ்' என்பதிலிருந்து 'யோக்' ஆகி வந்திருக்கிறது. அதாவது இணைத்தல் என்ற பொருளில். சிதறும் மனச் சக்தியைக் கூட்டுதல், ஆதியில் இருந்த நிலையில் தன்னைச் சேர்த்தல், யாதுமான சக்தியினிடம் சரணாகதியடைந்து அதனுடன் தன்னைச் சேர்த்தல், விசேஷ புருஷன் அல்லது இறைவனுடன் தன்னை இணைத்தல், - இதுவே யோகம்.
இந்த யோக நிலையை அடையுமுன், உலக வாழ்க்கையில் மேலாக எனப்படும் பொருள், புகழ், திறமை, பலம், சுகம் அடைவதற்கான 'சித்தி'களும் ஏற்படுவதால், உலகில், நல்ல அதிர்ஷ்டக்காரர்களை 'யோகக்காரர்கள்' என்றும், நினைத்தது கைகூடும் வேளையில், 'அவனுக்கு யோகமடிக்கிறது' என்றும் கூறுவது வழக்காயிற்று.
இந்த சாத்திரத்தில், முதல்படியாக ஒழுக்கமும் ஆச்சார அனுஷ்டானங்களும் விதிக்கப்பட்டிருப்பதால் நல்லவனை, உலகில் 'யோக்கியன்' என்று கூறுவது மரபாயிற்று.

No comments: