Showing posts with label பக்தி மார்க்கம். Show all posts
Showing posts with label பக்தி மார்க்கம். Show all posts

கலியுக அவதாரம்





Posted by Picasa

பக்தி யோகம்
















Posted by Picasa

BAJA GOVIDAM

yogara thovaa bhogara thovaa
sangara thovaa sangavigee naha
yasya brahmani ramate chittam - 2
nandati nandati nanda theva - 2

One may take delight in yoga or bhoga, may have attachment or detachment. But only he whose mind steadily delights in Brahman enjoys bliss, no one else.

yaavat pavano nivasathi dehe
thaavat pruchchhati kushalam gayhe
gatavati vaayau dehaa paaye-2
bharyaa bibyati tasmin kaaye-2

When one is alive, his family members enquire kindly about his welfare. But when the soul departs from the body, even his wife runs away in fear of the corpse.

jathilo mundii lujnchhita keshaha
kaashhaa yaambara bahu-krita veshhaha
pashyan napi-chana pashyati mudoo-2
rudaranii metham bahu-krita veshhaha-2

There are many who go with matted locks, many who have clean shaven heads, many whose hairs have been plucked out; some are clothed in saffron, yet others in various colors --- all just for a livelihood. Seeing truth revealed before them, still the foolish ones see it not.

kaate kaantaa dhana-gata chintaa
vaatula kintava naastini yantaa
trijagati-sajjana sangati-raikaa-2
bhavati bhavaa-nava tarane naukaa-2

Oh mad man! Why this engrossment in thoughts of wealth? Is there no one to guide you? There is only one thing in three worlds that can save you from the ocean of samsara. Get into that boat of satsangha (knowledge of the Truth) quickly.

maa-kuru-dhana-jana yavvana garvam
harati-ni-may-shitha kaalaha sarvam
maayaa mayamidam akhilam bhootvaa-2
brahma-padam-tvam pravishavi dhetvaa-2

Do not boast of wealth, friends, and youth. Each one of these are destroyed within a minute. Free yourself from the illusion of the world of Maya and attain the timeless Truth.

naarii-sthana-bhara naabhii-desham
drishhtvaa- maagaa mohaa-vesham
ethan-maamsaava sadavi-kaaram-2
manasivi-chintaya vaaram-vaaram-2

Do not get drowned in delusion by going wild with passions and lust by seeing a woman's navel and chest. Bodies are flesh, fat and blood. Do not fail to remember this again and again in your mind.

kurute gangaa saagara gamanam
vrata-pari-paalana mathavaa daanam
gyaanavi-nina sarvama-tena-2
bhajatina muktim janmasha-tena-2

One may go to the Ganga, observe fasts, and give away riches in charity! Yet, devoid of jnana, nothing can give mukthi even at the end of a hundred births.

praanaayaamam pratyaahaaram
nityaa-nityavi vekavi chaaram
jaapyasa-me’tasa-maadhivi-dhaanam-2
kurva-vadhaanam-madhava-dhaanam-2

Regulate the pranas (life airs within), remain unaffected by external influences and discriminate between the real and the fleeting. Chant the holy name of God and silence the turbulent mind. Perform these with care, with extreme care

satsang atve nissang-atvam
nissang atve nirmo-hatvam
nirmo-hatve nishchala-tattvam-2
nishcala-tattve jiivan’muktihi-2

From Satsanga comes non-attachment, from non-attachment comes freedom from delusion, which leads to self-settledness. From self-settledness comes Jivan Mukti (liberation).

baala-sthava greeda sak-thaha
taruna-sthava tarunii sak-thaha
vriddha-sthava chintaa sak-thaha-2
parame-brahmani goapina sak-thaha-2

Childhood is lost in play. Youth is lost by attachment to woman. Old age passes away by thinking over many past things. Alas! Hardly is there anyone who yearns to be lost in Parabrahman.

punarapi jananam punarapi maranam
punarapi jananii jathare shaya-nam
punarapi jananam punarapi maranam
punarapi jananii jathare shaya-nam
iha-samsaare bahu-dust-thaare-2
kripayaa paare paahi muraare-2

Born again, death again, birth again to stay in the mother's womb! It is indeed hard to cross this boundless ocean of samsara. Oh Murari! Redeem me through Thy mercy.

bhaja-govindam bhaja-govindam - 2
govindam bhaja muuda-ma-the - 3

Worship Govinda, Worship Govinda, Worship Govinda.

DYANALINGA AT VELLIANGIRI

DYANALINGA TEMPLE AT VELLIANGIRI VALLEY - COIMBATORE, SOUTH INDIA.
SATHGURU JAGGI VASUDEV - FOUNDER.












பிற கிரகங்களுக்கு எளிதான பயணம்-7

புற உலகு புகும் இரகசியம்
பிரபஞ்சத்தின் இயக்கங்களை ஆள்வதற்காக, அதிதேவதைகள் எனும் சக்திவாய்ந்த அதிகாரிகள் நியமிக்கப்பட்டிருக்கிறார்கள். நெருப்பு, காற்று, மின்சாரம், இரவு, பகல் முதலியவற்றிற்கு தேவதைகள் ஆளுநராக இருப்பதை உணர்ந்த பக்குவப்பட்ட யோகிகள், இத்தேவதைகளின் நல்லுறவோடு, தமது உடலை தகுந்த நேரத்தில் நீத்து, பௌதிக உலகின் உயர் கிரகங்களுக்கோ அல்லது ஆன்மிக புற உலகுக்கோ செல்ல வழி செய்து கொள்கின்றனர்.

"யாகம், தானம், தவம் முதலான நற்காரியங்கள் புரிவதால், நல்ல சந்தர்ப்பத்தில் உடலை விடும் யோகிகளல்லாத பிறரும், உயர்கிரகங்களை அடைகின்றனர். எனினும் இவர்கள் பூமிக்குத் திரும்பிவர வேண்டியவரேயாவர். 'தூமா' எனும் சந்திரனற்ற மாதப்பகுதியில், சூரியன் தனது தென் திசைக்கதியிலியங்கும் நேரத்தில் இவர்கள் உடல் நீக்குகின்றனர்."

தனியாக ஒருவர் தான் விரும்பும் ஒரு கிரகத்தை அடைதல் சாத்தியமே எனினும், இது மனத்தின் மனோதத்துவ மாற்றத்தால் மட்டுமே முடியும். ஜட உடலின் உட்கரு மனமே. மனத்தின் எண்ணங்களின் மாற்றத்தை அதாரமாகக் கொண்டு ஜட உடலின் பரிணாம முன்னேற்றம் நிகழ்கிறது. ஒரு புழுவின் உடலுருவிலிருந்து வண்ணத்துப்பூச்சியின் உடல் தோன்றுதலும், ஆண் பெண்ணாக, பெண் ஆணாக மாறுவதும் மனோதத்துவ மாற்றங்களையே பெரும்பாலும் பொறுத்திருக்கின்றன.

மரணத்தின்போது, பகவான் இறைவனின் இடத்தில் மனத்தை நிறுத்தி, உடலை விடுபவர்கள் உடனேயே ஆன்மிக உலகின் உன்னத நிலையை அடைவர் என்று கீதையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

எனவே ஜடத்திலிருந்து மனத்தை பகவானின் திவ்விய ரூபத்தை நோக்கி திருப்பப்பழக்கப்படுத்திக் கொள்வதற்கான பக்தி சேவையின் நியமங்களை அனுசரிப்பவர் எவராயினும் ஆன்மிகப் புறவெளியில் ஆண்டவனின் அகக்ரகத்தை அடைவது சுலபம்.

பிற கிரகங்களுக்கு எளிதான பயணம்-6

ஜட உலகம் அழிவுக்குட்பட்ட இயற்கையை உடையது. பௌதிக ஆன்மிக உலகங்கள் மோதலால் பெரு நாசம் உண்டாகும் என்ற பௌதிக விஞ்ஞானிகளின் கூற்றில் சிறிது உண்மை இருக்கின்றது. பௌதிக உலகானது இயற்கை நிலைகளால் உண்டாக்கப்படுவதாக இருக்கின்றது. இந்த நிலைகள் ஸத்வம் (நற்குணம்), ரஜஸ் (தீவிரம்), தபஸ் (அறியாமை) என்பனவாம். இந்த ஜட உலகம் தீவிர குணத்தால் படைக்கப்பட்டு, நற்குணத்தால் காக்கப்பட்டு, அறியாமையால் அழிக்கப்படுகின்றது. இக்குணங்கள் சர்வமயமாயிருப்பதனால், ஒவ்வொரு கணமும், நிமிடமும், மணிநேரமும், ஆக்கலும் காத்தலும், அழித்தலும் நடைபெற்றுக்கொண்டே இருக்கின்றன.

இவ்வுலகின் மிக உயர் கிரகமான பிரம்ம லோகமும் இவ்வியற்கை நிலைக்குட்பட்டதேயாம்.

நற்குணத்தின் ஆதிக்கத்தால் 43,00,000 x 1000 x 2 x 30 x 12 x 100 கதிரவ வருடங்களுக்கு இங்கு வாழ்நாள் நீடிக்கிறது. இந்த நீண்ட வாழ்நாளைக் கொண்டபோதும் இவ்வுலகம் அழிவுக்குட்பட்டதேயாம். பௌதிக உலகில், பூமியில் வாழும் நாட்களுடன் ஒப்பிடுகையில் வினோதமாகப் பெருகிய காலத்தைக் கொண்ட வாழ்நாள் இருப்பினும் பிரம்ம லோகத்து வாழ்வு, ஆன்மிக உலக வாழ்வின் ஒரு துளிபோன்றதேயாம்.

பௌதிக உலகின் அழிவு இருவிதமாய் உண்டாகிறது. 43,00,000 x 1000 சூரிய வருடங்களுக்கொரு முறை, பிரம்மலோகத்தின் ஒவ்வொரு தினத்தின் முடிவுலும், பகுதிப்பிரளயம் ஏற்படுகின்றது. இப்பிரளயத்தின் போது உயர்க்கிரகங்களான பிரம்மலோகம் போன்றவை அழிவுறுவதில்லை. ஆனால் 43,00,000 x 1000 x 2 x 30 x 12 x 100 கதிரவ வருடங்களுக்கொரு முறை முழுப்பிரளயம் ஏற்படும் போது, பிரபஞ்சம் முழுவதுமே, பௌதிக மூலாதார தத்துவங்கள் உருவாகும் ஆன்மிகப் பெருவுடலோடு ஒன்றிவிடுகின்றது. எனினும் ஜடவெளியிலிருந்து வெகு தொலைவிலுள்ள ஆன்மிக உலகு அழிவுறுவதில்லை. அது பௌதிக உலகங்களை தன் வயப்படுத்திக்கொள்கின்றது. இவ்வுண்மையை ஆன்மிக த்த்துவத்தின் நிர்ணயங்களை உணர்ந்தறிந்த முக்தர்களின் இழுக்கற்ற ஆதாரத்திலிருந்தே அறியமுடியும்.

இவ்விதமாக வேத ஞானமானது ஜடவுலகின் முதல் உயிர்வாழியான பிரம்மாவின் இதயத்தில் அறிவுறுத்தப்பட்டது. நாரதருக்கு இந்த ஞானம் பிரம்மாவால் வழங்கப்பட்டது. இதுபோன்றே பகவத் கீதையின் ஞானம் விவஸ்வான் எனும் சூரியதேவதைக்கு ஸ்ரீகிருஷ்ணனால் வழங்கப்பட்டது. இந்த சீடப்பரம்பரையின் தொடர்பு விட்டுபோனபோது மீண்டும் அர்ஜுனனுக்கு உபதேசம் செய்யப்பட்டது.

ஆன்மிக உலகின் விவரங்களை அறியுமுன்பு ஒருவன் தனது இதயத்தையும், பழக்கவழக்கங்களையும் முழுமையாகத் தூய்மைப்படுத்திக் கொள்ளல் அவசியம். பக்குவப்பட்ட யோகியும், புதிய பயிற்சியாளனும் பழகும்படியாக 'பக்தியோகம்' உன்னதமான தெளிவான விஞ்ஞன வழியாக விளங்குகின்றது.

பரமபுருஷனான பகவான், வேறெந்த பலனுமின்றி ஒருவனால் சேவை செய்யப்படுகையில் பௌதிக உலகின் விஷயங்கள் தாமாகவே ஒளியூட்டப்படுவதோடு உலகாயதமான விதத்தில் செயலாற்றாமலே பக்தனின் உள்ளம் வளம்பெறுகின்றது. இதுவே பகவத் கீதையின் ரகசியமாகும். இது அனைத்து உயிர்வர்க்கங்களுக்கும் பொருந்தும்.

புற உலகு புகும் வழி
ஆன்மிக உலகங்களிற் புகுவது, ஜட உபகரணங்கள் மூலமாக அல்லாமல் வேறுபட்டதாக இருக்கின்றது. இவ்வுலகில் வாழும்போதே ஆன்மிக சேவைகளிலீடுபட்டு உயிர்கள் புற உலகு புகும் பேறு பெறலாம்.
ஆனால் உலகாயதவாதிகள் சோதனை செய்தறியும் அறிவில் முழு நம்பிக்கை கொண்டவரும் பழுத்த பௌதிக வாதிகளுமானவர் ஆன்மிக புற உலகு புக மிகவும் சிரமப்படுகின்றனர். இவர்களின் விண்கலங்கள் பௌதிக உலகின் வேறு கிரகங்களையே அணுக இயலாதவைகளாக இருக்கையில், பௌதிக அண்டங்களுக்கப்பால் வெகு தொலைவில் உள்ள சேதனப் புறவெளியை அடைய இயலாததாகும். பௌதிக உடலைக்கட்டுப்படுத்த இயன்ற யோகிகளுக்கு கூட இந்தப்பிரதேசம் புகமுடியாததாகும்.

ஆன்மிக சேதனத்தை கட்டுப்படுத்தி இயக்கி, ஒரு குறிப்பிட்ட சமயத்தில் தன்னிச்சையாக உடலைவிட்டுப் போகும் சித்தர்கள், பௌதிக ஆன்மிக உலகுகளை இணைக்கும் ஒரு தனிப்பாதை வழியாக ஆன்மிக உடலை அடைய முடியும். இப்படி முயலுபவர்கள் கூட கீதையில் குறிப்பிடப்பட்ட முறையை பின்பற்றுகின்றனர்.

"உன்னதத்தை உணர்ந்து கொண்டவர்கள், உத்தராயணம் எனும் சூரியன் தனது வடதிசைக் கதியிற் செல்லும் காலத்தில் நெருப்பு, ஒளி இவற்றின் அதிதேவதைகளால் வாயுமண்டலம் ஆதிக்கப்படுத்தப்பட்ட சுபநேரத்தில் உடலை நீத்து, ஆன்மிக உலகை அடைய இயலும்."

பிற கிரகங்களுக்கு எளிதான பயணம்-5
பிற கிரகங்களுக்கு எளிதான பயணம்-4
பிற கிரகங்களுக்கு எளிதான பயணம்-3
பிற கிரகங்களுக்கு எளிதான பயணம்-2
பிற கிரகங்களுக்கு எளிதான பயணம்-1

பிற கிரகங்களுக்கு எளிதான பயணம்-5

உயிருள்ள உடலின் இந்த விதமான விவரிப்பு, சக்தி இருவிதங்களில் உள்ளது என்ற விஞ்ஞானக் கண்டுபிடிப்பை நிச்சயப்படுத்துகிறது. இவ்விரு சக்திகளிலொன்றான சேதனம் ஜட உடலைவிட்டுப் பிரிக்கப்படும்போது, பின்னது எல்லாவிதங்களிலும் உபயோகமற்றுப் போகின்றது. எனவே சேதன அங்கமென்பது ஜடசக்தியைக் காட்டிலும் உயர்ந்தது என்பது தெளிவாகின்றது.

"எனவே, ஜடசக்தியின் நஷ்டத்தை எண்ணி, எவரும் கலங்குதலாகாது. வெப்பம், குளிர், இன்பம், துன்பம் என்ற வகைவகையான புலன் நுகர்ச்சிகளெல்லாம், வந்துபோகக்கூடிய, ஜடசக்தியின் இடை விளைவுகளேயாம். நிலையற்ற இவ்வித ஜட இடைவிளைவுகளின் தோற்றமும் மறைவுமே, 'ஜீவன்' என்றழைக்கப்படும் உயிர்ச்சக்தியினாலேயே பௌதிக உடல் உருவாக்கப்பட்டுள்ளது என்பதை நிச்சயப்படுத்துகிறது.

இன்பமும், துன்பமும் கீழ்த்தரச்சக்தியின் இடை விளைவுகளால் ஏற்படும் பௌதிக நிலைகளே என்பதை அறிந்துகொண்ட மதிநலம்பெற்றவன், நிலையான, உண்மையான ஞானம் முழுமைபெற்ற, ஆனந்தமயமான வாழ்வைக் கொண்ட ஆத்மிக உலகை அடையத் தகுதி பெறுகிறான்.

சேதன உலகு இங்கு விவரிக்கப்படுவதோடு மட்டுமன்றி அங்கு "காலமாற்றம்" (ஏற்ற இறக்கம்) இல்லை என்பதும் விளக்கப்பட்டுள்ளது. அங்கு எல்லாமே நிலையானதும், முழுமையான ஞானத்தையும் ஆனந்தத்தையும் பூரணமாகப் பெற்றவையாம். இதை 'உலகு' என நாம் குறிப்பிடும்போதே, இது உருவமும் அங்கங்களும் கொண்டது என்பது நிச்சயமாகின்றது. நமது அனுபவத்திற்கப்பாற்பட்ட உபகரணங்களால் இவ்வுலகு அமைக்கப்பட்டுள்ளது என்பதில் ஐயமில்லை.

"அழிவுக்குட்பட்டதனால் ஸ்தூல உடலானது மாறக்கூடியதும், நிலையற்றதுமாம். ஜட உலகும் இத்தன்மையதே. ஆனால் ஜடமற்றதான சேதன சக்தி அழிவற்றதாகையால் நிலைபெற்றதாகும். ஜட, சேதன அங்கங்களின் தன்மையை நிலையற்றது, நிலையானது என இரண்டு விதமாக விஞ்ஞானிகள் பிரித்தறிகின்றனர்."

இருந்தும், ஆன்மிகத் தத்துவங்களைப்பற்றி மனங்கொண்டு ஊகிப்பவை சிலர் வேறு சிலவிதமாகக் கூறுவதுண்டு. தீவிர உலகாயதவாதிகளான ஒரு பிரிவினர் ஆன்மிகத் தத்துவத்தின் இருப்பை மறுக்கவோ, அல்லது மரணத்தின்போது பௌதிக மூலங்களின் அமைப்பு சிதைவதை மட்டும் ஒத்துக்கொள்ளவோ செய்கின்றனர். மற்றோரு பிரிவினர் 24 விதமான பௌதிக மூலங்களுக்கு நேர் எதிராக ஆன்மிகத் தத்துவத்தை ஏற்றுக்கொள்கின்றனர். இப்பிரிவினர் 'சாங்கியர்' என அழைக்கப்படுபவர். ஜடத்தத்துவங்களைப் பிரித்து நுண்மையாக ஆராய்கின்றனர். தமது ஆராய்ச்சியுன் இறுதியில், இயக்கமற்ற ஒரு உன்னத தத்துவம் இருப்பதாக மட்டுமே ஒத்துக்கொள்கின்றனர்.

ஆனால் பௌதிக உலகின் நிலையிலிருந்து, ஆன்மிக உலகை மதிப்பிட ஒருவராலும் இயலாது. ஆனால் இறைவனை அறிந்து கொள்ள உயிர்ச்சக்திகளை ஆராய்வதன் மூலம் ஒர் அனுமானத்திற்கு வர இயலும்.

"அர்ச்சுனா! நானே உன்னத்தின் உயர்ந்த தத்துவம். எனக்கு மேற்பட்டு சிறந்தது ஒன்றுமில்லை. நூலில் கட்டிய மணிகள் போன்று, எல்லாமே என்னைச் சார்ந்து இருக்கின்றன"- என கீதையில் கண்ணபகவான் குறிப்பிடுகிறார்.

பிற கிரகங்களுக்கு எளிதான பயணம்-4
பிற கிரகங்களுக்கு எளிதான பயணம்-3
பிற கிரகங்களுக்கு எளிதான பயணம்-2
பிற கிரகங்களுக்கு எளிதான பயணம்-1

பிற கிரகங்களுக்கு எளிதான பயணம்-4

ஜடத்திற்கு சிருஷ்டிக்கும் சக்திகிடையாது. ஜீவ சக்தியால் இயக்கப்படுவதால்தான் ஜடப்பொருள்கள் உண்டாக்கப்படுகின்றன. பண்படாத நிலையில் ஜடமானது, உன்னத உயிரின் மறைச்சக்தியேயாகும். ஒரு சக்தியைப்பற்றி ஆராய்கையில் அந்தச் சக்தியின் மூலத்தை அறியவேண்டுவது இயற்கையே. உதாரணமாக, மின்சாரத்தைப்பற்றி நாம் எண்ணும்போதே மின்சார உற்பத்தி செய்யும் மின்நிலையம் நம் நினைவிற்கு வருகிறது. சக்தி மட்டும் தனியாக இயங்குதல் இயலாது. ஒரு உயர்ந்த உயிரின் கட்டுப்பாடுக்கடங்கியதே சக்தி. உதாரணமாக நெருப்பை எடுத்துக்கொண்டால் அது 'ஒளி, வெப்பம்' என்று சக்திகளை உடையதாகும். நெருப்பிலிருந்து தனியாக ஒளியும், வெப்பமும் சுயமாக இயங்கக்கூடியவை அல்ல. அதுபோலவே உன்னத, தாழ்ந்த சக்திகள் ஒரு உற்பத்தி தானமாக எல்லாமறிந்த பரம புருஷனாகத்தான் வழியுண்டு.
வேதங்களில் பரம சத்தியம் அல்லது உன்னதமான உயிர்சக்தியானது, "பகவான்" என்றழைக்கப்படுகின்றது. எல்லாச் சக்திகளின் ஊற்றுமூலமான சிறந்த உயிர் என்பது இதன் பொருள்.
நவீன விஞ்ஞானிகள் கட்டுப்பட்ட இரு சக்திகளைக் கண்டுபிடித்திருப்பது விஞ்ஞான முன்னேற்றத்தில் முதல்படி என்றே கொள்ளவேண்டும். ஜட அணு, எதிர் அணு என்று அவர்கள் இதனை அழைக்கிறார்கள்.

சேதனம்
சேதனவஸ்து எவ்வாறு விளக்கப்படலாம்?
ஜடப்பொருட்கள், ஜட அணுக்களைப்பற்றி நமக்கு அனுபவமிருக்கிறது. ஆனால் சேதன அங்கங்களைப்பற்றி மிகுந்த அனுபவமில்லை...
"சேதன அங்கமானது, ஜட உடலின் உள்ளேயே அமைந்துள்ளது. இதன் காரணத்தினாலேயே, ஸ்தூல உடலானது இளநிலையிலிருந்து, யுவநிலைக்கும், யுவநிலையிலிருந்து முதுநிலைக்கும், பிறகு சேதனம் முதிய உடலைவிட்டு போகும்போது ஜடம் செயலற்றதாகவும் ஆகின்றது. சேதனமானது வேறு தகுந்த ஸ்தூல உடலை அடைகிறது" என கீதை சேதனத்தின் தன்மையை பற்றி விவரிக்கிறது.


-----
பிற கிரகங்களுக்கு எளிதான பயணம்-3
பிற கிரகங்களுக்கு எளிதான பயணம்-2
பிற கிரகங்களுக்கு எளிதான பயணம்-1
-----

பிற கிரகங்களுக்கு எளிதான பயணம்-3

இந்த விஞ்ஞான்னிகளின் கண்டுபிடிப்பானது பௌதிகப் பொருள்காளுக்கெதிரான எதிரணுக்களைக் கண்டறிந்த போதும், வேறுவிதமான ஒரு ஜடசக்தியைக் காணும்வரை சென்று நின்றுவிடுகிறதே ஒழிய, ஜடமல்லாத, பௌதிகத் தத்துவமேயல்லாதவற்றைக் காணவில்லை. ஜடப்பொருளானது இயல்பாகவே, அழியக்கூடிய தன்மையை கொண்டதாகும். ஜடத்தன்மையின் லட்சணங்க்கள் சிறிதுமற்ற பொருள், அழியும் தன்மையுமற்றதாக, இயற்கையிலேயே அமையவேண்டுமல்லவா?
ஜடமானது அழியக்கூடியதும், பிரிவுபடக்கூடியதுமாக இருக்க வேண்டும். நம்பகமான சாத்திரங்களின் பார்வையில் இந்த 'சேதன' தத்துவங்களைக் காண்போம்:-
இவ்வுலகின் மிகவும் அங்கீகாரமான நூற்கள் வேதங்களாகும். வேதங்கள் 4 பிரிவுகளை உடையன. ரிக், யஜுர், சாம, அதர்வ என்பன அப்பிரிவுகள். சாதாரண அறிவுகொண்டவர் புத்திக்கெட்டாத விஷயங்கள் இவ்வேதங்களில் அடங்கியுள்ளன. தெளிவாக விளக்கும் பொருட்டு வேதங்கள், மகாபாரதம் போன்ற காவியத்திலும், பதினெண் புராணங்களிலும் விரித்துரைக்கப்பட்டுள்ளன. இராமாயணமும் வேதங்களின் கருத்தை விளக்கும் ஒரு காவியமே. நான்கு வேதங்கள், வால்மீகியின் மூலராமாயணம், மகாபாரதம், புராணங்கள்- இவை வேதபுத்தகங்களாகும். உபநிஷதங்களும் வேத நூல்களின் பகுதியாகக் கருதப்படுகின்றன. வேதாந்த (சூத்திரங்கள்) வேதங்களின் சாரமாகும். இந்த வேத நூற்களையெல்லாம் சுருக்கித் தந்தாற்போன்ற பகவத் கீதை, உபநிஷதங்களின் கருத்துரையும், வேதாந்த சூத்திரங்களின் சுருக்கமான பொருளுரையும் போன்றது. வேதங்களின் முடிவான தத்துவங்களை அறிந்து கொள்ள விரும்பும் ஒருவர் கீதையைப் புரிந்து கொள்வது அவசியம். ஆன்மிக உலகிலிருந்து இறங்கிவந்து, பௌதிககத்திற்கப்பாற்பட்ட, தன் உன்னதமான சக்தியைப்பற்றி முழுவிவரம் கொடுப்பத்ற்காக பகவான் ஸ்ரீகிருஷ்ணரால் உபதேசம் செய்யப்பட்டதால் கீதை வேத நூற்களெல்லாவற்றின் மணிமுடியாகத் திகழ்கின்றது.
பரம புருஷனின் உன்னதமான சக்தியை 'பராப்ரக்ருதி' என்று கீதையில் வர்ணிக்கப்பட்டுள்ளது. அழிவுக்குட்பட்ட ஜடப்பொருள்களில் இருவகை உண்டென்றுதான் இன்று விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். ஆனால் கீதையோ, ஜடம், சேதனம் என்பவற்றை இருவகைச் சக்திகளாகப் பிரித்து விவரிக்கின்றது. பொருளென்பது ஜடநிலையில் பௌதிக உலகை உருவமைக்கின்றது, தனது உன்னத நிலையில் சேதன உலகை உருவாக்குகின்றது.
உயிர்கள் உயர்சக்தியைச் சேர்ந்தவை. கீழ்ச்சக்தியான பௌதிக சக்தி, 'அபராசக்தி' என்றழைக்கப்படுகின்றது. பகவத்கீதை இவ்விதமாக 'பரா', அபரா' என்று சிருஷ்டி சக்தியை இருவிதமாக விளக்குகிறது.
-----
பிற கிரகங்களுக்கு எளிதான பயணம்-4
பிற கிரகங்களுக்கு எளிதான பயணம்-2
பிற கிரகங்களுக்கு எளிதான பயணம்-1
-----

பிற கிரகங்களுக்கு எளிதான பயணம்-2

புற உலக விவரணம்
ஸ்தூல உலகாயதவாதிகளின் சிந்தைக்கெட்டாமல் அவர்களைக் குழப்பிவந்த புற உலகினைப் பற்றிய விவரங்களை பெளதிக விஞ்ஞானிகள் ஒரு நாள் கண்டுபிடிக்கலாம். விஞ்ஞானிகளின் 'சேதனத்தைப்' பற்றிய இன்றைய எண்ணங்களைப் பற்றி, 'Times of India'(oct27,1959) கீழ்வருமாறு வெளியிட்டது:
"ஸ்டாக்ஹோல்ம்: அக்.26,'59-- இரண்டு அமெரிக்க அணு விஞ்ஞானிகளுக்கு இன்று 1959'ம் ஆண்டின் நோபல்பரிசி அளிக்கப்பட்டது. இவர்கள் 'ஆண்டிபுரோட்டான்' எனும் பொருளைக் கண்டறிந்துள்ளனர். இதன்மூலமாக ஜடப்பொருள்கள் இருவிதமான உருவங்களில் - துணுக்குகள் - எதிர்த்துணுக்குகள் - அமைகின்றன என்பது நிரூபிக்கப்படுகின்றது; டாக்டர் எமில்லோ செகர் எனும் இத்தாலியரும், டாக்டர் ஓவன் சாம்பெர்லின் எனும் சான்பிரான்சிஸ்கோ வாசியும் ஆன இவர்களது புதிய கண்டுபிடிப்பின் ஆதார தத்துவங்களின் படி, இவ்வுககுக்குப் புறம்பே, பெளதிகத் தத்துவங்களால் அல்லாது ஆக்கப்பட்ட சில உலகங்கள் இருப்பது சாத்தியம் என்று எண்ணப்படுகின்றது. இவ்வுலகின் அணுக்களும், உப அணுக்களை உடையதாக இப்புறவுலகு இருக்கலாம் என்று எண்ணப்படுகின்றது. இந்த இரு உலகங்களும் எப்போதேனும் மோதுமேயானால் இவையிரண்டுமே ஒரே சமயத்தில் அழிய நேரலாம்."
மேற்கண்ட செய்தியில், பின்வரும் பிரேணனைகள் எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளன.
1. பெளதிக அணுக்களின் குணங்களுக்கு எதிரான குணங்களை உடைய எதிரணுக்கள்--ஜடமில்லாதவை உண்டு.
2. இவ்வுலகுக்கு வெளியே, நமது அனுபவத்திற்கு எட்டாத வேறு உலகங்களும் உண்டு.
3. இவ்விரு உலகங்களும் தமக்குள் மோதி ஒரு சமயம் அழியலாம்.

இந்த 3 விஷயங்களில் முதல் இரண்டை ஆத்திக மாணவர் ஒத்துக்கொள்ளலாம். ஆனால் மூன்றாவது, ஜடமல்லாப் பொருளின் விஞ்ஞான முடிவுகளின் எல்லைக்குள்ளே மட்டுமே நாம் ஒத்துக்கொள்ள முடியும்.
-----
பிற கிரகங்களுக்கு எளிதான பயணம்-3
பிற கிரகங்களுக்கு எளிதான பயணம்-1
-------

பிற கிரகங்களுக்கு எளிதான பயணம்-1

(இது நான் படித்த புத்தகம் ஒன்றின் துணையுடன் எழுதப்படுகிறது. இது நான் தெரிந்து கொண்ட சுவாரசியமான செய்தியை பிறருடன் பகிர்ந்து கொள்ளும் முயற்சியேயன்றி வேரெதுவுமில்லை, மேலும் இதன் உண்மைத்தன்மைக்கும் நான் பொறுப்பில்லை. நன்றி -கவிப்ரியன்)

ஒவ்வோருயிரும் (முக்கியமாக பண்பட்ட மனிதப் பிறவியில்) என்றென்றும் நலமாக வாழும் ஆசையைக் கொண்டுள்ளது. இந்த எண்ணம் இயற்கையானதே. ஏனெனில் தமது உண்மை நிலையில் உயிர்களெல்லாம் அழிவற்ற, ஆனந்தமயமானவையே. எனினும் வாழ்வின் கட்டுப்பட்ட நிலையில், மீண்டும் மீண்டும் பிறந்திறக்கும் போராட்டத்தில் பலகாலமாக இவ்வுயிர்கள் ஈடுபட்டுள்ளன. இதனால்தான் நிலையான இன்பமோ, அழிவற்ற நிலையோ அடையாமல் இவை உலவுகின்றன.
தற்காலத்தில், பிற உலகங்களுக்கு யாத்திரை செய்யும் இச்சை மனித சமுதாயத்தில் தீவிரமாக வளர்ந்து வருகிறது. இதுவும் இயற்கையான விருப்பமே. இதுபோன்ற பிரயானங்கள் மனங்கவர்பவையும் மயக்குபவையும் ஆகும். விதவிதமான உயிரனங்கள் நிறைந்த எண்ணற்றவையும் பலதரப்பட்டவையுமான இந்த கோளங்களுக்குச் சென்றுவருவது கிளர்ச்சியூட்டும் அனுபவமே.
இதுபோன்ற பயணம் செல்லும் எண்ணம், 'யோகப் பயிற்சியின்' மூலம் சாத்தியமாகும். விரும்பிய இடத்திற்குச் சென்று சேரும் வழி யோகப்பயிற்சியே ஆகும்.
தனது சுயமுயற்சியின் மூலம் ஒருவன் இந்த பக்குவ நிலையை அடைதல் சாத்தியமே. பக்தியோகத்தின் விதிமுறையைத் தானிருக்கும் இடத்திலேயே பின்பற்ற முடியும். தக்க வழிகாட்டியின் கீழே அனுசரிப்பதனால் இவ்வழி சரளமானதும், மகிழ்ச்சியூட்டுவதுமாகும்.


பிற கிரகங்களுக்கு எளிதான பயணம்-2