பிற கிரகங்களுக்கு எளிதான பயணம்-5

உயிருள்ள உடலின் இந்த விதமான விவரிப்பு, சக்தி இருவிதங்களில் உள்ளது என்ற விஞ்ஞானக் கண்டுபிடிப்பை நிச்சயப்படுத்துகிறது. இவ்விரு சக்திகளிலொன்றான சேதனம் ஜட உடலைவிட்டுப் பிரிக்கப்படும்போது, பின்னது எல்லாவிதங்களிலும் உபயோகமற்றுப் போகின்றது. எனவே சேதன அங்கமென்பது ஜடசக்தியைக் காட்டிலும் உயர்ந்தது என்பது தெளிவாகின்றது.

"எனவே, ஜடசக்தியின் நஷ்டத்தை எண்ணி, எவரும் கலங்குதலாகாது. வெப்பம், குளிர், இன்பம், துன்பம் என்ற வகைவகையான புலன் நுகர்ச்சிகளெல்லாம், வந்துபோகக்கூடிய, ஜடசக்தியின் இடை விளைவுகளேயாம். நிலையற்ற இவ்வித ஜட இடைவிளைவுகளின் தோற்றமும் மறைவுமே, 'ஜீவன்' என்றழைக்கப்படும் உயிர்ச்சக்தியினாலேயே பௌதிக உடல் உருவாக்கப்பட்டுள்ளது என்பதை நிச்சயப்படுத்துகிறது.

இன்பமும், துன்பமும் கீழ்த்தரச்சக்தியின் இடை விளைவுகளால் ஏற்படும் பௌதிக நிலைகளே என்பதை அறிந்துகொண்ட மதிநலம்பெற்றவன், நிலையான, உண்மையான ஞானம் முழுமைபெற்ற, ஆனந்தமயமான வாழ்வைக் கொண்ட ஆத்மிக உலகை அடையத் தகுதி பெறுகிறான்.

சேதன உலகு இங்கு விவரிக்கப்படுவதோடு மட்டுமன்றி அங்கு "காலமாற்றம்" (ஏற்ற இறக்கம்) இல்லை என்பதும் விளக்கப்பட்டுள்ளது. அங்கு எல்லாமே நிலையானதும், முழுமையான ஞானத்தையும் ஆனந்தத்தையும் பூரணமாகப் பெற்றவையாம். இதை 'உலகு' என நாம் குறிப்பிடும்போதே, இது உருவமும் அங்கங்களும் கொண்டது என்பது நிச்சயமாகின்றது. நமது அனுபவத்திற்கப்பாற்பட்ட உபகரணங்களால் இவ்வுலகு அமைக்கப்பட்டுள்ளது என்பதில் ஐயமில்லை.

"அழிவுக்குட்பட்டதனால் ஸ்தூல உடலானது மாறக்கூடியதும், நிலையற்றதுமாம். ஜட உலகும் இத்தன்மையதே. ஆனால் ஜடமற்றதான சேதன சக்தி அழிவற்றதாகையால் நிலைபெற்றதாகும். ஜட, சேதன அங்கங்களின் தன்மையை நிலையற்றது, நிலையானது என இரண்டு விதமாக விஞ்ஞானிகள் பிரித்தறிகின்றனர்."

இருந்தும், ஆன்மிகத் தத்துவங்களைப்பற்றி மனங்கொண்டு ஊகிப்பவை சிலர் வேறு சிலவிதமாகக் கூறுவதுண்டு. தீவிர உலகாயதவாதிகளான ஒரு பிரிவினர் ஆன்மிகத் தத்துவத்தின் இருப்பை மறுக்கவோ, அல்லது மரணத்தின்போது பௌதிக மூலங்களின் அமைப்பு சிதைவதை மட்டும் ஒத்துக்கொள்ளவோ செய்கின்றனர். மற்றோரு பிரிவினர் 24 விதமான பௌதிக மூலங்களுக்கு நேர் எதிராக ஆன்மிகத் தத்துவத்தை ஏற்றுக்கொள்கின்றனர். இப்பிரிவினர் 'சாங்கியர்' என அழைக்கப்படுபவர். ஜடத்தத்துவங்களைப் பிரித்து நுண்மையாக ஆராய்கின்றனர். தமது ஆராய்ச்சியுன் இறுதியில், இயக்கமற்ற ஒரு உன்னத தத்துவம் இருப்பதாக மட்டுமே ஒத்துக்கொள்கின்றனர்.

ஆனால் பௌதிக உலகின் நிலையிலிருந்து, ஆன்மிக உலகை மதிப்பிட ஒருவராலும் இயலாது. ஆனால் இறைவனை அறிந்து கொள்ள உயிர்ச்சக்திகளை ஆராய்வதன் மூலம் ஒர் அனுமானத்திற்கு வர இயலும்.

"அர்ச்சுனா! நானே உன்னத்தின் உயர்ந்த தத்துவம். எனக்கு மேற்பட்டு சிறந்தது ஒன்றுமில்லை. நூலில் கட்டிய மணிகள் போன்று, எல்லாமே என்னைச் சார்ந்து இருக்கின்றன"- என கீதையில் கண்ணபகவான் குறிப்பிடுகிறார்.

பிற கிரகங்களுக்கு எளிதான பயணம்-4
பிற கிரகங்களுக்கு எளிதான பயணம்-3
பிற கிரகங்களுக்கு எளிதான பயணம்-2
பிற கிரகங்களுக்கு எளிதான பயணம்-1

No comments: