பிற கிரகங்களுக்கு எளிதான பயணம்-7

புற உலகு புகும் இரகசியம்
பிரபஞ்சத்தின் இயக்கங்களை ஆள்வதற்காக, அதிதேவதைகள் எனும் சக்திவாய்ந்த அதிகாரிகள் நியமிக்கப்பட்டிருக்கிறார்கள். நெருப்பு, காற்று, மின்சாரம், இரவு, பகல் முதலியவற்றிற்கு தேவதைகள் ஆளுநராக இருப்பதை உணர்ந்த பக்குவப்பட்ட யோகிகள், இத்தேவதைகளின் நல்லுறவோடு, தமது உடலை தகுந்த நேரத்தில் நீத்து, பௌதிக உலகின் உயர் கிரகங்களுக்கோ அல்லது ஆன்மிக புற உலகுக்கோ செல்ல வழி செய்து கொள்கின்றனர்.

"யாகம், தானம், தவம் முதலான நற்காரியங்கள் புரிவதால், நல்ல சந்தர்ப்பத்தில் உடலை விடும் யோகிகளல்லாத பிறரும், உயர்கிரகங்களை அடைகின்றனர். எனினும் இவர்கள் பூமிக்குத் திரும்பிவர வேண்டியவரேயாவர். 'தூமா' எனும் சந்திரனற்ற மாதப்பகுதியில், சூரியன் தனது தென் திசைக்கதியிலியங்கும் நேரத்தில் இவர்கள் உடல் நீக்குகின்றனர்."

தனியாக ஒருவர் தான் விரும்பும் ஒரு கிரகத்தை அடைதல் சாத்தியமே எனினும், இது மனத்தின் மனோதத்துவ மாற்றத்தால் மட்டுமே முடியும். ஜட உடலின் உட்கரு மனமே. மனத்தின் எண்ணங்களின் மாற்றத்தை அதாரமாகக் கொண்டு ஜட உடலின் பரிணாம முன்னேற்றம் நிகழ்கிறது. ஒரு புழுவின் உடலுருவிலிருந்து வண்ணத்துப்பூச்சியின் உடல் தோன்றுதலும், ஆண் பெண்ணாக, பெண் ஆணாக மாறுவதும் மனோதத்துவ மாற்றங்களையே பெரும்பாலும் பொறுத்திருக்கின்றன.

மரணத்தின்போது, பகவான் இறைவனின் இடத்தில் மனத்தை நிறுத்தி, உடலை விடுபவர்கள் உடனேயே ஆன்மிக உலகின் உன்னத நிலையை அடைவர் என்று கீதையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

எனவே ஜடத்திலிருந்து மனத்தை பகவானின் திவ்விய ரூபத்தை நோக்கி திருப்பப்பழக்கப்படுத்திக் கொள்வதற்கான பக்தி சேவையின் நியமங்களை அனுசரிப்பவர் எவராயினும் ஆன்மிகப் புறவெளியில் ஆண்டவனின் அகக்ரகத்தை அடைவது சுலபம்.

No comments: