உனக்குள் இருக்கிறது உன்னதம்-4


     இந்தக் கூட்டத்தில் உண்மையான அறிவாளி ஒருவர் இருந்தால் அடுத்த வினாடி அவர் என்ன செய்வார் என்பதை யாராவது கணிக்க முடியுமா? முடியாது. ஏனெனில் இதுவரை யாருமே செய்யாத ஒன்றை அவர் செய்துவிடக்கூடும். ஒரு அறிவாளி இருந்தால் உலகில் இதற்குமுன் நடந்தேயிராத நிகழ்ச்சி ஒன்றை அவரால் செய்ய அதிக சாத்தியம் இருக்கும் இல்லையா? ஆனால், இங்கே ஒரு ஒரு முட்டாள் இருப்பதாக வைத்துக்கொள்வோம். அவரைப் பார்த்த மாத்திரத்திலேயே அவர் வாழ்க்கை முழுவதும் எதிர்காலத்தில் எப்படி வாழ்வார் என்று எளிதாகச் சொல்லிவிட முடியும். நீங்கள் ஜோதிடம் பார்க்கப் போனால் உங்கள் எதிர்காலம் எப்படியிருக்குமென்று ஒரு காகிதத்தில் எழுதியே கொடுத்து விடுகிறார்கள். இதற்கு என்ன அர்த்தம்? உங்களுக்கு அறிவு இல்லை என்று அர்த்தமில்லை. அதைப் பயன்படுத்தப் போவதில்லை என்று நீங்கள் முடிவெடுத்திருப்பதாகத்தான் தெரிகிறது. உங்களுடைய அறிவைப் பயன்படுத்த வேண்டாம் என்று முடிவெடுத்ததுபோல் உள்ளது.

உதாரணத்திற்கு வடிவம் என்று ஒன்றிருந்தால் அதற்கொன்று சில அதிர்வுகள் இருக்கும். அந்த அதிர்வினால் ஒரு தன்மை இருக்கும். இப்போது இந்தக் கைகுட்டையை நான் ஒரு விதமாகப் பிரித்தால் அதற்கென்று ஒரு அதிர்வும், வேறுவிதமாகப் பிடித்தால் அதற்கென்று ஒரு அதிர்வும் இருக்கும். உங்களுக்குச் சூட்சுமமாக உணரத் தெரிந்திருந்தால் இதை அனுபவப்பூர்வமாக உணர்ந்து கொள்ள முடியும். நீங்கள் வைத்டிருக்கும் விதமே அதிர்வுகளை மாற்ற முடியும். ஒவ்வொரு வடிவத்திற்கென்றும் தனி அதிர்வுகள் உண்டு. அதுபோல் கிரகங்களுக்கும் சில அதிர்வுகள் உண்டு. அதிர்வுகள் காரணமாக அவை வென்வேறு நிலைகளில் இருக்கும்போது, அதில் ஏற்படும் நிகழ்வுகளினால் உங்களுடைய மனநிலையில் சில பாதிப்புகள் ஏற்படக்கூடும். உதாரணத்திற்கு அமாவாசை மற்றும் பௌர்ணமி நாட்களில் சற்றே மனநிலை சரியில்லாதவர்கள் சற்று கூடுதலாக நிலையில்லாமல் இருப்பார்கள். இது உங்களுக்குத் தெரியுமல்லவா? சற்றே மனநிலை சரியில்ல்லமல் இருப்பவர், சற்றே கூடுதலாகக் கட்டுப்பாடு மீறி இருப்பார். நீங்களும் அந்த நாட்களில் அதுபோல் ஆகி விடுகிறீர்காளா? உங்களையும் அமாவாசை, பௌர்ணமி நாட்களில் வீட்டுக்குள் பூட்டிவைக்க வேண்டுமா என்ன? தேவையில்லை அல்லவா! ஏனென்றால் அவர்களோடு ஒப்பிடும்போது உங்கள் மனம் கொஞ்சம் சமநிலையில் இருக்கிறது. அதனால் நிலா எங்கேயிருந்தாலும் அது உங்களுக்குள் பெரிய மாற்றங்களை ஏற்படுத்தவில்லை. அதுபோல இன்னும் கொஞ்சம் சம நிலையை நீங்கள் அடைவீர்கள் என்றால் அந்தக் கிரகம் எங்கே போனாலும் நீங்கள் உங்கள் தன்மைக்கேற்ப இருப்பீர்கள். உங்களைவிட குறைந்த சக்தி எதுவும் உங்களை ஆளாது.

இந்தக் கிரகங்கள், நட்சத்திரங்கள் எல்லாமே ஜடப்பொருட்கள் தானே? கல், மண் போல அவையும் ஜடப்பொருட்கள். ஜடப்பொருட்கள் வலிமையானவையா? மனிதத் தன்மை வலிமையானதா? மனிதத் தன்மை ஜடப்பொருட்கள் மீது ஆளுமை செலுத்த வேண்டுமா? அல்லது மனிதத் தன்மைமீது ஜடப்பொருட்கள் ஆளுமை செலுத்த வேண்டுமா? எது சரி? எது எதை ஆளவேண்டும்? மனிதத்தன்மைதான் ஜடப்பொருட்கள் மீது ஆளுமை செலுத்த வேண்டும். அந்நிலை வந்துவிட்டால் நட்சத்திரங்கள் எங்கே போனாலு, கிரகங்கள் என்ன ஆனாலும் நீங்கள் ஏன் கவலைப்பட வேண்டும்? உங்கள் உள் தன்மை உறுதியாகவும் சமநிலையிலும் இருந்தால் நீங்கள் விரும்பும் விதத்தில் உங்கள் வாழ்க்கையை நிச்சயமாக உருவாக்கிக் கொள்ள முடியும்.

யோக அறிவியல் என்பது உங்கள் முழு வாழ்க்கையையும் உங்கள் உடலின் தன்மை, உங்கள் மனதின் தன்மை, உங்கள் வாழ்வின் தன்மை அனைத்தையும் முழுக்க உங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்து நீங்கள் வுரும்பும் விதத்தில் வாழ்க்கையை அமைத்துக்கொள்வதற்கான வாய்ப்புத்தான். எந்த அளவிற்கு நீங்கள் ஆளுமை செலுத்த இயலுமென்றால் எந்தக் கருப்பையில் பிறக்கப் போகிறீர்கள் என்பதைக்கூட நீங்களே முடிவு செய்யலாம். அந்த அளவிற்கு முடிவெடுக்கும் சக்தி உங்களிடம் உண்டு. அதற்கென்ற ஒரு அறிவியல் அடிப்படையும் உண்டு. எப்போது பிறப்பது, எப்போது இறப்பது என்கிற முடிவைக்கூட நீங்களே எடுக்கலாம். அதற்கும் ஒரு அறிவியல் உண்டு. இந்த உள்நிலை அறிவியலைத்தான் யோகா என்கிறோம்.

இப்போது எண் கணிதத்திற்கு வருவோம். எண் கணிதப்படி பெயரை மற்றிக்கொண்டால் பயன் உண்டா என்று கேட்கிறீர்கள். நீங்கள் இக்கேள்வியைக் கேட்பதால், எனக்கொரு சம்பவம் நினைவிற்கு வருகிறது. நான்கைந்து ஆண்டுகளுக்கு முன் திருப்பூரில் ஈஷா யோகா வகுப்பு நடந்து கொண்டிருந்தது. அதில் பங்கேற்ற ஒருவர் தன் அடையாள அட்டையில் ‘பச்சா’ என்று ஆங்கிலத்தில் வரும் விதமாக எழுதியிருந்தார். நானும் அவரை பச்சா, பச்சா என்று அழைத்து கொண்டிருந்தேன். 12 நாள் வடுப்பிற்குப் பிறகு என்னிடம் வந்து, ‘நீங்கள் வகுப்பில் என்னை பச்சா, பச்சா என்றழைத்தீர்கள். என் பெயர் பச்சா இல்லை;பாட்ஷா’ என்று கூறினார். பச்சா எங்கே, பாட்ஷா எங்கே? இந்தியில் பாட்ஷா என்றால் ‘சக்கரவர்த்தி’ என்று பொருள். பச்சா என்றால் சிறுவன் என்று பொருள். எப்படி ஒப்பிடுவது? பச்சா என்று வரும்படி ஏன் எழுதியிருந்தீர்காள்?” என்று கேட்டேன். ‘யாரோ ஒரு எண் கணித ஜோசியர் கூறினார். அதனால் நான் பாட்ஷாவை பச்சாவாக மாற்றி விட்டேன்’ என்று கூறினார். வாழ்க்கையில் சக்கரவர்த்தியாகும் வாய்ப்பு இருக்கையில் ஒரு சிறுவனாக ஆவது ஏன்?

முதலில் இந்த எண்களை உருவக்கியவர் யார்? அவை இயற்கையிலேயே இருந்தனவா? நம்முடைய வசதிக்காக நம் விரல்களைக்கொண்டு எண்ணூவதற்கு வாய்ப்பாகத்தான் எண்களை உருவாக்கினோம். பத்து விரல்கள் என்கிற அடிப்படையில்தான் பத்து வரை எண்கள் வரையறுக்கப்பட்டன. நமக்குப் பதினான்கு விரல்கள் இருந்திருந்தால் 8,9,10, தாம், தூம், என்று எண்ணிக்கொண்டிருப்போம். 10 விரல்கள் இருப்பதால் நமது வசதிக்காக எண்கள் நம்மீதே ஆளுமை செலுத்தலாமா? இதற்கு ஒரு உதாரணம் சொல்ல விரும்புகிறேன். ஆறேழு வருடங்களுக்கு முன்பு நான் ஒரு மாருதி கார் ஓட்டிக்கொண்டிருந்தேன். பிறகு அதை விற்க முடிவு செய்தேன். எனக்குத் தெரிந்த ஒருவர் அதனை வாங்க முன் வந்தார். நான் அவரிடம், ‘அந்தக் கார் மிக அதிகமான அளவு பயன்படுத்தப் பட்டுவிட்டதால் அதை நன்றாகப் பார்த்துவிட்டு விருப்பம் இருந்தால் வாங்கிக் கொள்ளலாம்’ என்று சொன்னேன். அதற்கு அவர், ‘ இல்லையில்லை! எதையும் பார்க்க வேண்டாம். இதை நீங்கள் விற்றால் நான் தான் வாங்கவேண்டுமென்று, நீங்கள் அதை வாங்கும்போதே முடிவு செய்து விட்டேன்’ என்றார். ஏன் என்று கேட்டதற்கு. ‘உங்கள் காருக்கு அருமையான ஒரு எண் அமைந்திருக்கிறது’ என்றார். இத்தனை நாள் இந்தக் காரை ஓட்டியிருக்கிறேன். அதன் அருமையான எண் பற்றி எனக்கு எதுவும் தெரியவில்லை. “கார் எண்ணெல்லாம் இருக்கட்டும். முதலில் ஓட்டிப் பாருங்கள். வாங்கும் முன்பே பிடித்திருக்கிறதா என்று பாருங்கள்” என்று வற்புறுத்தினேன். அவர், ‘அதெல்லாம் வேண்டாம். இந்த எண் அமைந்ததே போதும்’ என்று சொல்லிவிட்டார். எப்படி இப்படி ஒரு மனிதர் இருக்க முடியும் என்று ஆச்சரியமாக இருந்தது.

அவர் என்னிடம் அந்தக் காரின் எண் 333 என்றும்; அவரது பிறந்தநாள் 3-வது மாதம், 3-ம் தேதி என்பதால், அன்று காலை பதினொன்றேமுக்கால் மணி அளவில் காரை எடுத்துச் செல்வதாக கூறினார். நான் அப்போதைய நிலவரத்தில் அந்தக் கார் என்ன விலைக்குப் போகும் என்று அவரையே விசாரித்து அதற்கேற்ப ஒரு தொகையைக் கொடுக்குமாறு சொல்லிவிட்டேன். அவர் இருக்கும் நிலையைப் பார்த்து அவரை அப்படியே விட்டுவிடக்கூடாது என்று எனக்குத் தோன்றியது. எனவே அவரிடம், ‘பதிவு எண்தான் வெளியில் உள்ளது. ஆனால் காரின் உண்மையான எண், என்ஜினிலும், சேசிஸ்ஸிலும் இருக்கும். பதிவு எண்ணை எப்போது வேண்டுமானாலும் மாற்றிக்கொள்ளலாம். என்ஜின் மற்றும் சேஸிஸ் எண்களைத்தான் பார்க்க வேண்டும் என்று சொன்னேன். இப்போது அவர் மிகவும் குழப்பமடைந்து விட்டார். தனது எண்கணித குருவிடம் கேட்கச் சென்றார். அவரோ அந்த எண்கள் எல்லாம் தேவையில்லை, பதிவு எண்ணைப் பார்த்தாலே போதும் என்று சொல்லிவிட்டார். என்ஜினிலும் சேஸிஸிலும் எண்கள் இருக்குமா என்றே கூட அவருக்குத் தெரியவில்லை. இது பார்வைக்குத் தெரியுமோ, அது மட்டும் தேவை. எனவே, அவர் என்னிடம் இருந்த காரை வாங்கிக்கொண்டார். அவர் அந்தக் காரை ஒரு லட்ச ரூபாய்க்கு வாங்குவதாகச் சொல்லியிருந்தார். நானும் சம்மதித்திருந்தேன். அவர் பணத்தைக் கொண்டுவந்த போது 99999 ரூபாய் தரவேண்டும் என்பதற்காக ஒரு ரூபாய் குரைத்து தர சங்கடமாக இருந்தது. எனவே அந்த ரூபாய்க்கு பதிலாக ஒரு பெரிய பரிசுப் பொருளையும் சேர்த்து கொண்டுவந்திருந்தார். நான் அவரிடம், ‘நீங்கள் எது வேண்டுமானாலும் செய்யுங்கள். இந்தக் காரை நீங்கள் மகிழ்ச்சியோடு கொண்டு சென்றால் எனக்கு மகிழ்ச்சிதான்’ என்று சொல்லிவிட்டேன்.

பிறகு ஒரு நாள் அவர் காரை ஓட்டிக்கொண்டு செல்லும்போது, பின்னால் சாய்ந்து கொள்ளும் வசதியுள்ள அவரின் இருக்கை திடீரென்று பின்னே நகர்ந்து விட்டது. அவர் மிகவும் பயந்து விட்டார். ஏதோ ஒரு தீய சக்தி அவரைப் பின்னாலிருந்து இழுத்துவிட்டதாக எண்ணிக்கொண்டார். ஒருமுறை நான் அவரது இல்லத்திற்குப் போக நேர்ந்தபோது, ‘கார் எப்படியிருக்கிறது’ என்று கேட்டேன். மிகவும் தயங்கித்தயங்கி, ‘அந்தக் கொடிய நிகழ்ச்சி நடந்ததால் காரை விற்றுவிட்டேன்’ என்றார். இருக்கையின் பிடிமானம் எங்காவது அறுந்து பின்னோக்கி நகர்ந்திருக்கக்கூடும் என்பது கூட அவருக்குப் புரியவில்லை.

நீங்கள் எப்போதும் அச்சத்திலேயே வாழ்வதால்தான் ஜோதிடமும் எண்கணிதமும் உங்கள் வாழ்க்கையில் ஆட்சி செலுத்துகிறது. நீங்கள் அன்பிலோ, அமைதியிலோ, ஆனந்தத்த்லோ வாழ்வதில்லை. அச்சத்திலேயே வாழ்கிறீர்கள்ல் அச்சமே உங்கள் வாழ்வின் அடிப்படையாகும் பொழுது ‘நான் என்ன சொல்லியும் உங்களை நம்ப வைத்துவிட முடியும். எதையும் நம்பி விடுவீர்கள். ‘தினமும் வீட்டை விட்டுக் கிளம்பும் போது, உங்கள் சுண்டு விரலை மூன்று முறை வாயில் வைத்துவிட்டுக் கிளம்ப வேண்டும், இல்லையென்றால் என்ன நடக்கும் என்றே தெரியாது’ – இப்படி நான் சொல்லிவிட்டால், அதையும் ஒரு கதையோடு கொஞ்சம் திகிலூட்டும் விதமாகச் சொல்லிவிட்டால் போதும். இப்போது கேலியாகச் சொல்லிவிட்டேன்.

உங்கள் உள்நிலைமீது, உங்களுக்கு எந்த மரியாதையும் இல்லை. நாம் உருவாக்கிய எண்களும், சில ஜடப்பொருட்களும் உங்களுக்கு மிகவும் முக்கியமாகிவிட்டன. அவையே உங்கள் மீது ஆட்டி செலுத்துகின்றன. இவையணைத்துக்கும் மேலான சக்தி உங்களுக்குள்ளேயே இருக்கிறது. ஆனால் அதன்மேல் உங்களுக்கு எந்த மரியாதையும் இல்லை. 1,2,3,4 இப்போது உங்களுக்கு முக்கியமாகிவிட்டது.

இதனை முதலில் உணருங்கள்.

உனக்குள் இருக்கிறது உன்னதம்-3


    ஆண்களைவிடவும் பெண்கள் பாலவீனமானவர்கள் என்பதால், பெண்களை உளவியல் ரீதியாகவும் வலிமையிழந்தவர்களாக்கி, ஆன்மிகத்திலும் அவர்களைப் பலவீனப்படுத்தி, பொருளாதாரத்திலும் ஒன்றும் இல்லாமல், ஆக்க என்னவெல்லாம் செய்ய வேண்டுமோ அத்தனையும் செய்தார்கள். இந்த நிலை ஆயிரமாயிரம் ஆண்டுகளாக இருந்து வருகிறது. எல்லாமே ஆண்களைவிடப் பெண்கள் உடல் ரீதியாக பலவீனமானவர்கள் என்கிற ஒரே காரணத்தால்தான் வேறெந்த விதத்திலும் ஆண்கள் பெண்களைவிட மேம்பட்டவர்கள் என்று சொல்லிவிட முடியாது. கொஞ்சம் கூடுதலான வலிமையிருக்கிறது; அவ்வளவுதான். ஆயிரமாயிரம் ஆண்டுகளாக இது தொடர்ந்து கொண்டேயிருக்கிறது. இது மிகவும் நீளமானதொரு காலம் என்றே கருதுகிறேன். இதுபற்றி கவனம் கொண்டு மக்கள் எதையாவது செய்ய வேண்டும். பெண்களை மதிக்கக் கற்றுக்கொள்ளும்வரை- ஒவ்வொரு ஆணும் பெண்களை மதிக்கக் கற்றுக்கொள்ளும்வரை அவன் தன்னைத்தானே உணர வாய்ப்பேயில்லை. ஏனெனில், அவனின் பாதியே பெண்மைதான்.

     இந்திய ஆன்மிக உலகில், தன்னை உணருகின்ற விழிப்பு நிலையின் உச்சத்தைத் தொடுதலில், ஆண்களும், பெண்களும் பெரும்பங்கு வகித்திருக்கிறார்கள். உள் நிலையைப் பொறுத்தவரையில் ஆணிற்கு இணையான தன்மை பெண்ணிற்கும் உண்டு என்பது ஐயத்திற்கு அப்பாற்பட்ட நிலையில் நிரூபிக்கப்பட்டுள்ளது. மேலேயிருக்கிற தோலைத்தான் ஆண் என்றும், பெண் என்றும் பிரிக்கிறோமே தவிர, உள்ளே இருக்கிற தன்மை ஒன்றுதான். ஆண் தோலா? பெண் தோலா? என்பதுதான் பேதம். உங்கள் ஆன்மிக சக்தியை நிர்ணயிக்கக் கூடியவை இந்தத் தோல்கள் அல்ல. வேண்டுமானால் உடல்கூற்று அளவில் சில பின்னடைவுகள் பெண்களுக்கு இருக்கலாம். ஆனால், உளவியல் ரீதியில் அவர்கள் இன்னும் கூடுதல் வலிமை பெற்றவர்கள். வேத காலங்களிலிருந்தே பெரிய முனிவர்களாகப் பெண்கள் திகழ்ந்திருக்கிறார்கள். வழிபாட்டு முறையின் தொடக்கமே பரம் பொருளை ஓர் அன்னையாக வணங்குவதில்தான் தொடங்கியது. விலையில்லாத இறைத்தன்மையை அன்னையாகத்தான் பார்த்தார்கள். அன்று முதல் இன்றுவரை அது தொடர்கிறது. இன்று கூட பெண் தெய்வ வழிபாடு என்பது ஆண் தெய்வ வழிபாட்டை விட அதிகம் இருக்கிறது. அறியாமையில் இருக்கிற ஒரு மனிதன் கூட, அனைத்துக் கடவுள்களும் தன்னைக் கைவிட்டுவிட்டதாகக் கருதினால், விரைவான நன்மைகளைப் பெறுவதற்கு அம்மன் கோவிலுக்குத்தான் செல்கிறான்.

     வேத காலங்களில் அந்தணர்கள் அணிகிற பூணூலைப் பெண்களும் அணிந்திருந்தார்கள். பூணூல் அணிகிற தகுதி அவர்களுக்கு இருந்தது. ஏனென்றால் பூணூல் இல்லாமல் வேதங்களையோ, இதிகாசங்களையோ படிக்கக்கூடாது என்கிற விதிமுறை அன்றைக்கு இருந்தது. ஆன்மிகம் ஆண்களுக்கு மட்டும் உரியதல்ல. பெண்களுக்கும்கூட என்பதாஅல் பூணூல் அணிவிக்கப்பட்டிருந்தது. மைத்ரேயி போன்ற பெண் முனிவர்கள் நிறைய பேர் அன்று இருந்தார்கள்.

     ஜனக மகாராஜாவின் அரண்மனையில் ஒருமுறை ஆன்மிக விவாதம் நடந்ததாகச் சொல்லப்படுகிறது. அதில் பங்கேற்க எல்லா முனிவர்களும், ஞானிகளும், சாதுக்களும் கூடியிருந்தார்கள். எது உண்மை, எது போய், என்று கண்டறிவதர்க்கான போட்டி என்றுகூட அதைச் சொல்லலாம். ஜனக மகாராஜா தன்னை உணர்ந்த ஒருவர். தன்னுள் இருக்கும் உண்மையை உணர்ந்த ஒரு அரசர். எனவே, இப்படியொரு விவாதத்தை ஏற்படுத்தி நாட்டில், ஆன்மிகப் பாதையில் இருக்கிற ஒவ்வொரு மனிதரும் பங்கேற்கும் விதமாக அமைத்திருந்தார். விவாதம் தொடரத் தொடர சூட்சும நிலையில் அது நடைபெறத் துவங்கியது. தொடக்கத்தில் அங்கே குழுமியிருந்த அத்தனை பேருமே ஆன்மிக விவாதத்தில் பங்கேற்றார்கள். ஆனால் நேரம் செல்லச் செல்ல பலர் அமர்ந்து பார்த்துக்கொண்டிருந்தார்களே தவிர, என்ன நடந்து கொண்டிருக்கிறது என்பதை அவர்களால் உணர முடியவில்லை. அந்த அளவுக்கு விவாதங்கள் சூட்டுமமாய்ப் போய்க்கொண்டிருந்தது. இரண்டே இரண்டு பேர்தான் தொடர்ந்து விவாதித்துக் கொண்டிருந்தார்கள். ஒருவர் யாக்ஞவல்கியர், இன்னொருவர் மைத்ரேயி.

     இந்த இருவருக்கும் இடையிலான விவதம் நாட்கணக்கில் தொடர்ந்து நடைபெற்றது. உணவு இல்லாமல், உறக்கம் இல்லாமல் விவாதம் நடந்து கொண்டேயிருந்தது. எல்லோரும் உட்கார்ந்து அதைப் பார்த்து கொண்டிருந்தார்களே தவிர, எதைப் பற்றிப் பேசுகிறார்கள் என்பதுகூடத் தெரியாத அளவுக்குச் சூட்சுமநிலையிலேயே விவாதங்கள் போய்க்கொண்டிருந்தன. இறுதியில் மைத்ரேயி கேட்ட ஒரு கேள்விக்கு யாக்ஞவல்கியரால் பதில் சொல்ல முடியவில்லை. ஆன்மிகப் பாதையில் செல்வதற்காக அரசையே துறந்துவிட்டு வந்த அந்த மானிதர், கூர்மையான மதிக்கு மிகவும் பகழ் பெற்றிருந்த ஆவர், மைத்ரேயியின் கேள்விகளுக்குப் பதில் சொல்ல முடியாத நிலையிலிருந்தார். கோபமும், பதட்டமும் அடைந்தார். மைத்ரேயியிடம் சொன்னார்: “இன்னமும் ஒரு கேள்வி கேட்டால் நீ துண்டு துண்டாக வெடித்துவிடுவாய்” என்று. ஜனக மகாராஜா தலையிட்டு, “உங்களுக்கு எல்லாம் தெரிந்திருப்படு போல் ஒரு தோற்றம் இருந்தாலும் வாழ்க்கை அவுல்பவத்துக்குள் அவையெல்லாம் வராததால் கேள்விகளுக்குப் யாக்ஞவல்கியரிடம் பதில் சொல்ல முடியவில்லை” என்றார். குழுமியிருந்த அத்தனைபேர் மத்தியிலும் அவர் மைத்ரேயிக்கு உரிய மரியாதைகள் செய்தார் என்று பார்க்கிறோம்.

     யாக்ஞவல்கியர் தன் குறைகளை உணர்ந்து, மைத்ரேயியின் கால்களில் விழுந்து, தன்னையும் ஒரு சீடராக ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறார். மத்ரேயி அவரிடம் சொல்கிறாள்: “நீங்கள் என் சீடராஅக இருக்க வேண்டாம். கணவராக இருங்கள்”, என்று. ஏனென்றால் தன் ஆற்றலுக்கு ஓரளவு இணையாக வருகிற எந்த மனிதரையும் அவள் இதுவரை சந்தித்ததில்லை. அவள் உணர்ந்ததை அவர் உணராவிட்டாலும் கூட, ஓரளவுக்காகவாவது இணையாக வருபவர் யாக்ஞவல்கியர் என்பதால் அவரைக் கணவராகக் கொள்வது என்று மைத்ரேயி முடிவெடுக்கிறாள். பல ஆண்டுகள் குடும்பம் நடத்துகிறாள். வேத காலங்களில் ஆண்களுக்கு இருந்த அனைத்து ஆத்ம சாதனைகளும் பெண்களுக்கும் இருந்தன. ஒரு குறிப்பிட்ட வயதிற்குப் பிறகு, யாக்ஞவல்கியர் மைத்ரேயிடம் வந்து, “இந்த உலக வாழ்க்கை போதும் என்று கருதுகிறேன், என்னிடம் இருப்பதெல்லாம் உன்னிடம் கொடுத்துவிட்டு நான் கானகங்களுக்குப் போய் என்னை நானே உணர முற்படுகிறேன்” என்று சொல்லுகிறார்.

     உடனே மைத்ரேயி. “இதுபோன்ற சொற்ப விஷயங்களின் பின்னால் செல்வேன் என்று எப்படி நினைத்தீர்கள்? உண்மையான பொக்கிஷத்தைத் தேடி நீங்கள் போகிறபோது, இந்தச் சின்ன சின்னப் பொருட்களைப் பெரிதென்று எண்ணி நான் இருந்துவிடுவேனா?” என்று கேட்கிறாள். பிறகு இருவருமே கானகத்துக்குப் போய் ஞானமடைந்த நிலையிலே வாழ்கிறார்கள் என்று பார்க்கிறோம்.

     இதுபோல ரிறைய கதைகள் உண்டு. இது நமக்கு உணர்த்துவது என்னவென்றால், வேதகாலங்களில் ஆன்மிக வாஅழ்க்கையைப் பொறுத்தவரை பெண்கள் சரிசமமாகக் கருதப்பட்டார்கள் என்பதுதான். இவை மிகவும் சீர்பட்ட சமுதாயங்களாகத் திகழ்ந்தன. சமூகம் சீராக இருந்தாஅல் ஒரு பெண்தான் ஆதிக்கம் செலுத்துவாள். ஆதிக்கம் செலுத்தவேண்டும் என்றுகூட அவசியமில்லை. எல்லாஅத் துறைகளிலும் சரிசமமாக அவள் திகழ்வாள். சமூகத்தில் சிக்கல்கள் ஏற்படுகிறபோதுதான், சமூக வாழ்க்கை சீர்குலைக்கப்பட்டு, இடப்ப்லெயர்ச்சி நிகழ்ந்து ஆணின் கை ஓங்குகிறது. அத்தகைய சூழ்நிலகளில் ஒரு பெண் பெரிதும் ஆணையே சார்ந்து வாழ்கிறாள். வாழ்க்கை கடுமையாகும்போது ஆண் ஆளுமை செலுத்துவதும், வாழ்க்கை மிகவும் சூட்டுமநிலையிலேயே இயங்குகிறபோது பெண் ஆளுமை செலுத்துவதும் இயல்பு. அந்த நேரங்களில் ஒரு பெண்ணைச் சார்ந்துதான் ஒரு சமூகம் இருக்கும். ஒருவேளை இதனால்தான் ஆண்கள் சமூகத்தில் எப்போதும் குழப்பங்களை மேலும் மேலும் உருவாக்கிக்கொண்டு அதன்மூலம் தங்களுடைய ஆதிக்கத்தை நிலைநிறுத்திக் கொள்கிறார்களோ என்னவோ?

     கி.மு.3000-த்திலிருந்தே வரலாறு நமக்குச் சொல்வது என்னவென்றால் ஆணும், பெண்ணும் சரிநிகராஅக இருந்து வந்திருக்கிறார்கள் என்பதுதான். அதற்குப் பிறகு ஆசிய நாடுகளில் பல்வேறு பகுதிகளாஅன மங்கோலியாஅ, மத்திய சீனா, இந்தோசீனா போன்ற இடங்களிலிருந்து காட்டுமிராண்டித்தனமான படையெடுப்புகள் நிகழ்ந்த போதுதான் – கொள்ளையடித்து உண்டு வாழும் ஒரு வாழ்க்கை வந்த போதுதான் – பெண் மெல்ல மெல்ல தன் சுதந்திரத்தை இழக்கலானாள். எது கிடைத்தாலும் அள்ளிக்கொண்டு போகிறவர்கள் வந்தவுடன், ஆண்கள் பாதுகாப்புப் பணிகளில் நாட்டம் செலுத்தத் துவங்கினார்கள். எனவே செயல்முறைகள் ஒருதலைபட்சமாகி சாத்திரங்களும், சூத்திரங்களும் கொண்டுள்ள விதிமுறைகள் மாற்றி ஸ்மிருதிகளாக எழுதப்பட்டன. வேதங்கள்தான் ஸ்மிருதிகள். அவை வாழ்வின் அடிப்படை உண்மைகளைப் பேசுகின்றனவே தவிர, வாழ்க்கை குறித்த எந்த நிர்ணயமும் வகுப்பதில்லை.

     பிறகு ஸ்மிருதிகள் எழுதினார்கள். 50-லிருந்து 60 சதவிகிதம் வரை ஸ்மிருதிகள் ஒரு பெண்ணின் வாழ்க்கை எப்படியிருக்க வேண்டும் என்பதை நிர்ணயிப்பதாகவே அமைந்தது. ஒருவேளை அதற்கான கட்டாயம் அப்போது இருந்தது இன்று சொல்லலாம். வெளிச்சூழ்நிலை காரணமாகப் பெண்மீது சில தடைகள் வகுக்கப்படவேண்டியதாக இருந்திருக்கலாம். ஆனால், அவை நிராந்தரமான சட்டங்களாகா மாறியது துரதிர்ஷ்ட்டவசமானது. ஸ்மிருதிகளைப் பொறுத்தவரை பெண்ணுக்கு அதிராகச் செய்த முதல் மாற்றாம் எனபது பெண்கள், ஆண்களைப் போல பூணூல் அணிய முடியாது என்று நிர்ணயித்ததுதான். அது ஒரே நேரத்தில் எழுதப்பட்டிருக்க முடியாது. படிப்படியாகத்தான் நிகழ்ந்திருக்கக்கூடும். மெல்ல அது மேலும் வளர்ந்து, ஒரு பெண் முக்தியடைய ஒரே வழி அல்லது தன்னை உணர்வதற்கான இரே வழி தன் கணவனுக்குப் பணிவிடை செய்வதன் மூலமாகத்தான்; அதைத்தவிர வேறு வழியே இல்லை என்று முடிவு செய்தார்கள்.

    வேதகாலங்க்ளில் ஒரு பெண் தன்னுடைய குடும்ப வாழ்வை எப்போது வேண்டுமானாலும் முடித்துக் கொள்ளலாம். ஆணுக்கு இருந்த அதே சுதந்திரம் பெண்ணுக்கும் இருந்தது. சமூகத்தில் எந்த ஒரு எதிர்விளைவையும் ஏற்படுத்தாமல், இத்தகைய முடிவுகளைப் பெண்கள் எடுத்ததற்கான பல சான்றுகள் உள்ளன. அது சமூகத்தால் ஏற்கப்பட்டது. ஒரு பெண் தான் விரும்பிய கணவரைத் தேர்ந்தெடுத்துக் கொண்டாள். அந்த எல்லை தாண்டி அவள் வளர்ந்துவிட்டதாகக் கருதினால், அக்குடும்பம் என்கிற அமைப்பைவிட்டு ஒரு ஆண் வெளிவருவதைப் போலவே பெண்ணும் வெளிவந்து கொண்டிருந்தாள். ஆண் ஒருவனுக்குத் திருமணம் ஆகிறது. பத்து, இருபது ஆண்டுகள் குடும்பம் நடத்துகிறான். பிறகு ஆன்மிக நாட்டம் வருகிறது. குடும்பத்தை துறந்துவிட்டுப் போகிறான். அதே உரிமை ஒரு பெண்ணுக்கும் இருந்தது. ஆன்மிகப் பாதையில் செல்லவேண்டும் என்ற நாட்டம் அவளுக்கு வந்தபோதெல்லாம் குடும்பத்தைத் துறந்துவிட்டு அவள் சென்றிருக்கிறாள். இது வேதகாலத்தில் முழு மனதோடு ஏற்கப்பட்டிருக்கிறது.

     காலப்போக்கில் யாரோ துறவு மேற்கொள்வது ஆணுக்குத்தான் சாத்தியம் என்று வரையறுத்துவிட்டார்கள். இது பற்றி யாருமே கேள்வி எழுப்புவது இல்லை. ஒரு ஆண், ஒரு பெண்ணைத் துறந்துவிட்டு ஆன்மிகப் பாதையில் போகலாம். தன்னிடம் இருப்பது எதையும் துறப்பது எல்லாருக்கும் உள்ள உரிமைதானே. ஒரு ஆண் ஒரு பெண்ணைத் துறந்துவிட்டால் அந்தப் பெண்ணை யார் பார்த்துக்கொள்கிறார்கள் என்பது போன்ற கேள்விகளுக்கு விடையே இல்லை. இதை அப்படியே விட்டு விட்டார்கள். இருவருக்கும் அதே சுதந்திரம் இருந்தால் அது வேறு. ஒருவருக்கு மட்டும் இந்தச் சுதந்திரம் இருந்து, இன்னொருவருக்கு இல்லாதபோது அது தீமையிழைப்பதாகத்தான் இருக்க முடியும். துரதிர்ஷ்டவசமாக அப்படியொரு சட்டம் போடப்பட்ட பிறகுதான் மகிழ்ச்சியாகச் சேர்ந்து வாழ்கிற ஆண்கள் மற்றும் பெண்களின் எண்ணிக்கை குறைந்துவிட்டதாகக் கருதுகிறேன்.

     ஆமாம்! ஏனென்றால், இரண்டு பேர் முழு மகிழ்ச்சியாக- ஆனந்தமாக சேர்ந்து வாழ்வது எப்போது சாத்தியமென்றால், அவர்கள் சுதந்திரமான நிலையில் சந்திக்கிறபோதுதான். ஒரு கட்டுப்பாட்டுடன் சந்திக்க நேருமானால், பிறந்த நாள் முதல் அடிமையாகவே இருந்த ஒரு பெண்ணை திருமணம் செய்ய நேர்ந்தால், அந்தப் பெண்ணை உங்களுக்கு அடிமையாக இருக்கத்தான் பழக்கியிருப்பார்களே தவிர, வேறு எதுவும் இல்லை. ஒருவேளை அதிக பட்சம் அந்த வாழ்க்கை அவளுக்கு வசதியாக இருக்கலாம். ஆனால் வாழ்க்கை ஆனந்தமாக இருக்க முடியாது. அவள் வசதியாக இருப்பாள். உங்கள் தேவைகளைப் பார்த்துக்கொள்வாள்.. அவ்வளவுதான்.

     துரதிர்ஷடவசமாக இன்று கூட இதுதான் தொடர்கிறது. ஒரு உயிர், பெண்ணாகப் பிறந்த உடனேயே, ஒன்று தன் தந்தைக்கு அல்லது கணவனுக்குச் சேவைகள் செய்வதற்குத்தான் அந்த பிறப்பே எடுத்ததாகச் சொல்லப்படுகிறது. அதைத் தாண்டி எதுவுமேயில்லை என்பதுபோல் சொல்லப்பட்டிருக்கிறது. அதுவும் இதைச் சொல்பவர்கள் யாரென்றால் அத்வைதம் பேசுகிறவர்கள் தான் இதைச் சொல்லிக் கொடுக்கிறார்கள். “உலகில் எல்லாமே ஒன்றுதான். ஆனால், ஆண்களைவிடக் குறைந்தவள் பெண்.” இது, அவர்களுக்கு எப்படித் தோன்றியது என்று எனக்குப் புரியவில்லை. பிறப்பிற்குக் காரணமான பாலியல் ரீதியான வேற்றுமையைக் கூட ஏற்றுக்கொள்ள முடியாத யாருமே அத்வைதிகளாக இருக்க முடியாது. ஆணுடைய வாழ்க்கை பெண்ணைச் சார்ந்தே இருக்கிறது. எனவே அவளை ஒப்புக்கொள்ள இயலாவிட்டால், வாழ்க்கையின் அனைத்து இருமைகளையும் ஒன்றாக ஏறுக்கொள்வதென்பது சாத்தியமே இல்லாத ஒன்று. மனித குல வாழ்க்கையிம் ஆதாரங்களில் ஆணைவிட, பெண்ணுக்குத்தான் அதிகப்பங்கு இருக்கிறது. ஆணுக்குப் பங்கு ஒரு அளவு வரைதான். எனவே, பெண்ணை ஏற்றுக்கொள்ளாத போது, ஆண் மிகவும் குறுகிய மனப்பான்மை கொண்டிருக்கக் கூடும், அல்லது அறியாமையில் இருக்கக் கூடும். அனால் இவை எல்லாமே சில வசதிகள் கிடைக்கின்றன என்பதனால் இருக்கின்ற குறுகிய மனப்பான்மைகள் தான். என்ன நந்தாலும் வசதியாக இருந்தால் எதற்காக அதை விட்டுக் கொடுப்பது? அது சரியா? தவறா? என்ப்லதெல்லாம் கேள்வியல்ல. அதில் நன்மை கிடைக்கிறது என்றால் ஏன் விடவேண்டும் என்று நினைக்கிறார்கள். இந்த மனநிலை மாறாவிட்டால் அங்கே ஆன்மிகம் இருக்காது. அங்கே ஆன்மிகம் இருக்க வழியே கிடையாது.

     இன்றுகூட நாம் பார்க்கிறோம், அம்மன் கோவில் முன்னால் போய் விழுந்து கும்பிடுகிற ஒரு ஆண் வீட்டுக்குப் போய் மனைவியை அடிக்கிறான். அவன் அறியாம கொண்டவன் மட்டுமல்ல; நேர்மையில்லாதவன். குறுகிய மனப்பான்மை இல்லாவிட்டால் இப்படியொரு பார்வை வாராது.

     அதேபோல் ஆண் செய்வதை எல்லாஅம் பெண்ணும் செய்வது என்று வந்தால் அதுவும் சரியாக இருக்காது. அது மிகவும் ஆபாசமாகத்தான் இருக்கும். மேற்கில் இதுதான் நடக்கிறது. இங்கேயும்கூட இது ஒரளவு இருக்கிறது. ஆக பெண்கள், முயற்சி செய்து வருகிறார்காள். அது நிகழ்ந்தால் இரு சாராருக்குமே சேதம்தான் அதிகம். ஒரு பெண், பெண்தன்மையை இழந்தால் அது மிகவும் அசிங்கமாக இருக்கும். ஆண் போல ஆகவேண்டும் என்று பெண் நினைப்பதே தவறு. அவள் ஏன் ஒரு ஆண்போல ஆகவேண்டும்? ஏனென்றால், அவளுக்குள்ளேயே ஏதோ ஓரிடத்தில் தான் தாழ்ந்தவள் என்றும்; ஆண் உயர்ந்தவன் என்றும் ஒரு எண்ணம் இருக்கிறது. எனவே ஆண்போல ஆக அவள் நினைக்கிறாள்.

     அவளது இந்த எண்ணம் மாறினால் மட்டுமே, உன்னதமடைய முடியும்.

உனக்குள் இருக்கிறது உன்னதம்! - 2


     எப்பொழுதும் இவ்வுலகம் மிகச்சிறந்த இடமாகத்தான் இருந்திருக்கிறது. இந்த உலகத்தைப் பற்றியோ, மற்ற கிரகங்களைப் பற்றியோ நமக்குத் தெரிந்த வகையில் மற்றா எல்லா கிரகங்களைக் காட்டிலும் இவ்வுலகமே மிகச்சிறந்த இடமாக இருக்கிறது. பேராசை கொண்டு இந்த முட்டாள்கள் தான் சிறிதும் விழிப்புணர்வில்லாமல், மனிதகுலத்திற்கு நன்மை பயக்கும் என எண்ணிக் கொண்டு, மற்ற அனைத்து உயிர்களையும் கொன்று குவித்துக்கொண்டேயிருந்தார்கள். ஆனாலும், அந்த மனித குல நன்மை என்பது இன்றளவும் ஒரு கனவாகவே இருக்கிறது. ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக மற்ற உயிர்களைப் படுகொலை செய்த பிறகும், பல மனிதப் படுகொலைகளுக்குப் பிறகும் மனிதகுல நன்மை என்பது இன்னும் தொலைதூரத்திலேயே உள்ளது. மனிதன் பத்தாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு சுபிட்சமாக இருந்த அளவுக்கு இப்பொழுது இல்லை. விஞ்ஞானம் மற்றும் தொழில்நுட்பம் மூலம் நம் வெளிப்புறச் சூழ்நிலையை மிக அதிகமாக மாற்றியிருக்கிறோம். இருந்தும் மனிதகுல நன்மை அல்லது சுபிட்சத்தின் அருகில் நாம் இல்லை.

     ஆகவே, மனிதகுல நன்மைக்கு என்ன செய்யவேண்டும் எனக் கண்டுகொள்ள நமக்குள் பார்த்து கட்டாயமாக்க இதுவே சரியான நேரம். உங்கள் உள்தன்மை மாறினால்தான் உண்மையான நலம் ஏற்படும் என்பதை உங்கள் வாழ்க்கை அனுபவத்திலிருந்து நீங்கள் உணர முடியும். தற்பொழுது உங்கள் வாழ்க்கையின் தரத்தை, நீங்கள் அணியும் உடையோ, உங்களின் கல்வித் தகுதியோ அல்லது உங்கள் குடும்பப் பின்னணியோ, வங்கிக் கையிருப்போ நிர்ணயிப்பதில்லை. இந்தக் கணத்தில் நீங்கள் உங்களுக்குள் எந்த அளவுக்கு அமைதியாகவும், ஆனந்தமாகவும் இருக்கிறீர்களோ அது மட்டும்தான் உங்காள் வாழ்க்கையின் தரத்தை நிர்ணயிக்கிறது.

   ஆகவே, யோகாவும், தியானமும் உங்கள் உள்தன்மையைக் கையாளுகிற அறிவியலின் ஒரு பரிமாணம் ஆகும். இங்கு நீங்கள் வாழ்க்கையை அமைதியாகவும், ஆனந்தமாகவும் வாழ்வதற்குரிய சரியான உட்புறச்சூழலை உருவாக்குவதே அதன் முக்கிய நோக்கம். வேறுவிதமாகச் சொன்னால் நீங்கள் மிகவும் நன்றாக வாழமுடியும். நீங்கள் அன்பாகவும், ஆனந்தமாகவும் மாறிவிட்டால் சுபிட்சமடைந்து விட்டதாக கருதுவீர்களா? ஆகவே, யோகா மற்றும் தியானம் என்று சொல்வது சரியல்ல. யோகா என எதைச் சொல்கிறீர்களோ அதில் தியானமும் அடங்கியுள்ளது. முன்பு எப்போதும் இருந்ததைவிட இந்தக் காலகட்டத்தில் யோகா அதிகமான முக்கியத்துவம் பெறுகிறது. இதற்கு முந்தைய காலத்தில் முக்கியமாக இல்லையென நான் கூறவில்லை. ஏன் இதைக் கூறுகிறேனென்றால், இன்று உலகில் பல செயல்கள் செய்வதற்குச் சக்திவாய்ந்த கருவிகளைக் கொண்டுள்ளோம். நவீன தொழில்நுட்பத்தின் உதவியால் நீங்கள் விரும்பினால் மலையை நாளையே தரைமட்டமாக்க முடியும். இந்த மாதிரியான ஒரு சக்தி நம் கையில் இருக்கும்பொழுது, உள்நிலை புத்திசாலித்தனமும் வாழ்க்கையைப் பற்றிய விழிப்புணர்வும் மற்ற உயிரினங்களை நமக்குள் ஒரு பாகமாக உணருகின்ற தன்மையும் நமக்கு இருப்பது மிக மிக அவசியமாகிறது. இல்லையெனில் உங்களுக்கே நீங்கள் மிகப்பெரிய சேதத்தை விளைவித்துக் கொள்வீர்கள். அந்த மாதிரியான ஒரு நேரத்தில்தான் இப்பொழுதும் இருக்கிறீர்கள்.

     சுவாசிப்பதே பிரச்சினையாகும் அளவிற்கு நீங்கள் தேசத்தையும் உருவாக்கிக் கொண்டிருக்கிறீர்கள். இங்கு எந்த உலகத்தில் உயிர்வாழ்வதே பிரச்சினையாக ஆகிக்கொண்டு வருகிறது. வெளிப்புற அறிவியலைச் செயல்படுத்தியதால் மட்டுமே இந்த மாதிரி நடந்திருக்கிறது. சரியான உள்சூழலை உருவாக்கக் கூடிய உள்நிலை அறிவியலை நீங்காள் கவனிக்கவேயில்லை. ஆகவே, நீங்கள் சக்தி வாய்ந்தவர்களாக இருப்பதால் யோக அறிவியல்தான் உன்பு எப்போதையும்விட இக்காலகட்டத்திற்கு மிகவும் தேவையாக இருக்கிறது. நீங்கள் சக்தியுடன் இருப்பதால், நீங்கள் புத்திசாலித்தனமாக இருப்பது மிகவும் முக்கியமாகிறது.

     இது எனக்கு இக்கிரகத்தில் வாழ்ந்த மிகவும் சக்தி வாய்ந்த மனிதர்களைப் பற்றி நினைவூட்டுகிறது. சர்வாதிகாரிகள் எல்லாம் அவர்கள் வாழ்ந்த காலத்தில் அவர்கள் நாட்டில் மிகவும் சக்தி வாய்ந்தவர்களாகத் திகழ்ந்தார்கள். ஒருநாள், முசோலினி அனைத்து இத்தாலிய புகைவண்டிகளையும் குறித்த நேரத்தில் ஓடும்படிச் செய்தார். ஒருசில புகைவண்டி ஓட்டுநர்களைச் சுட்டதன் மூலம் இதை அவர் நடத்திக் காட்டினார். இத்தாலியில் அனைத்து புகைவண்டிகளும் குறித்த நேரத்தில் ஓடத் தொடங்கின. அவர்கள் வரலாற்றில் அதுபோல இதற்கு முன்பு நடந்ததேயில்லை. ஆனால் திடீரென்று நடக்கத் தொடங்கியது. இதனால் முசோலினி புளகாங்கிதம் அடைந்து அவர் உருவம் பொறித்த தபால்தலை வெளியிட்டபொழுது ஒரு புதுபிரச்சினை உருவானது. தபால் தலைகளெல்லாம் அஞ்சல் உறையின் மீது இல்லாமல் கீழே விழுவதும், தபால் பைகளில் சேர்வதுமாக நடந்தது. இது முசோலினியின் கவனத்திற்கு வந்த பொழுது தபால்துறைத் தலைவரை அழைத்து " நீங்கள் ஏன் உயர்ந்த ரக பசையை உபயோகிப்பதில்லை" எனக் கேட்டார். அதற்குத் தபால் துறைத் தலைவர் மிகுந்த பயத்துடனும், தயக்கத்துடனும் "உயர்ந்த ரக பசையைத்தான் உபயோகிக்கிறோம், ஆனால் மக்கள் தபால்தலையின் முன்பக்கத்தில் தான் எச்சிலைத் தடவுகிறார்கள்." என்று கூறினார்.

     ஆகவே, நீங்கள் சரியான திசையில் செல்ல இதுவே தருணம். நவீன விஞ்ஞானம் உங்களுக்களித்திருக்கும் வசதிகளைப் பயன்படுத்தியே உண்மையான மனிதகுல நன்மையை அடைவதற்கேதுவான பரிமாணத்தை யோக அறிவியல் உங்களுக்குள் திறக்கச் செய்யும்.

உனக்குள் இருக்கிறது உன்னதம்! - 1


****************************************************************
‘உனக்குள் இருக்கிறது உன்னதம்’ என்ற இக்கட்டுரையை சத்குரு ஜகி வாசுதேவ் அவர்களின் சொற்ப்பொழிவுகளில் இருந்து தொகுக்கப்பட்டதாகும். அது புத்தகமாகவும் வெளிவந்துள்ளது. எனக்கு கிடைத்த அந்த பொக்கிஷம் மற்றவர்களுக்கும் பயன்படவேண்டும் என்ற நோக்கில் இந்த வலைப்பூவில் அரங்கேற்றுகிறேன். நன்றி. – கவிப்ரியன்.
**************************************************************** 
     ஆத்ம சாதனையில் ஒரு பிரம்மச்சாரி ஈடுபடுவதற்கும், இல்லறத்தில் இருப்பவர் ஈடுபடுவதற்கும் எந்த வேறுபாடும் இல்லை. இல்லறத்தில் இருப்பவர் ஆத்ம சாதனையில் ஈடுபட பலரது அனுமதியையும் பெற வேண்டும். அவர்கள் அனுமதி தரலாம்; தராமலும் போகலாம். இல்லறத்தில் அத்தகைய சிக்கல்கள் உண்டு. ஆனால் ஒரு பிரம்மச்சாரி தானாக முடிவெடுக்கலாம். குறிப்பிட்ட சில ஆத்ம சாதனைகளை மேற்கொள்வது இல்லறவாசிகளுக்கு சிரமமாக இருக்கும். அதற்குத் தேவையான சூழலை உருவாக்க முடியாது. அப்படியானால் உண்மையை உணர்ந்திட எல்லோருமே பிரம்மச்சாரியாக வேண்டுமா என்ற கேள்வி எழலாம். அப்படியொன்றும் அவசியமில்லை. உள்நிலையிலிருக்கும் உண்மையை உணர்வதற்கு வெளிச்சூழல் எப்படியிருந்தால் என்ன? நமக்கு எப்படித் தேவையோ அதற்கேற்ப அமைத்துக்கொள்ளலாம்.

     சிலர் திருமணம் செய்துகொள்கிறார்கள். சிலர் பிரம்மச்சாரியம் மேற்கொள்கிறார்கள். இரண்டில் எது சரி, அது தவறு? அல்லது இரண்டில் எது சிறந்தது? இப்ல்படி எதுவுமேயில்லை. ஒவ்வொருவருமே தங்கள் தனிமனிதத் தேவைகளுக்கு ஏற்ப வாழ்கிறார்கள். சிலருக்குத் திருமணம் தேவையில்லை. எனவே பிரம்மச்சரியம் மேற்கொள்கிறார்கள். எல்லோருக்கும் ஒரே விதிகள் இருப்பது சாத்தியமில்லை. திருமணம் தேவைப்படுபவர்களுக்குப் பிரம்மச்சரியம் தரப்பட்டால் அவருக்கு அது நரகம். திருமணம் வேண்டாதா ஒருவர் திருமண பந்தத்திற்குள் திணிக்கப்பட்டால் அவருக்கு அது வேறுவிதமான நரகம். அவருக்கு மட்டுமன்றி அவருடன் திருமண பந்தத்தில் இணைபவருக்கும் அது ஒரு நரகமாகத்தானிருக்கும்.

     பலரும் இந்நிலைக்கு ஆளாகியிருக்கிறார்கள். செம்மறி ஆடுகள் போல் வாழ்ந்திருக்கிறார்கள். தங்களுக்குத் திருமணம் வேண்டுமா? வேண்டாமா? என்பது பற்றி அவர்கள் சிந்திக்கவேயில்லை.  எல்லோருக்கும் திருமணமானதால் இவர்களும் திருமணம் செய்துகொண்டார்கள். அதற்கான தேவையிருக்கிறதா என்பதைப் பற்றியெல்லாம் ஆழமாகச் சிந்திக்கவேயில்லை. மூன்று நாட்களுக்குப் பிறகு, இந்த ப்ந்தம் அவருக்குத் தாங்க முடியாத சுமையாகிவிடுகிறது. திருமணத்தோடு சேர்ந்து வரும் மற்ற பொறுப்புகளை அவரால் ஏற்றுக்கொள்ள முடிவதில்லை. திருமணம் என்றால் வாழ்க்கை முறையிலேயே நிறைய மாற்றங்கள். இந்த மாற்றங்களை எதிர்கொள்வதற்கும், புதிய பொறுப்புகளை ஏற்றுக்கொள்வதற்கும் முழுமையாகத் தயார் செய்துகொண்ட பிறகுதான் திருமணபந்தத்திற்குள் ஒருவர் நுழைய வேண்டும் அல்லவா? அது ஒரு நாளில் முடிந்துவிடுகிற விஷயமல்ல; அத்தோடு சேர்த்து பல விஷயங்கள் உள்ளன.

     நீங்கள் என்ன செயல் செய்தாலும், அதன் தொடர்ச்சியாக நிறைய விளவுகள் இருக்கும். உள்ளபடியே நீங்கள் அறிவாளியாயிருந்தால், அந்தச் செயல்களுக்கான விளைவுகளுக்கு நீங்கள் தயாரா என்று ப்லார்த்து, அது உங்களுக்குத் தேவையா? இல்லையா? என்று முடிவு செய்வீர்கள். விளைவுகளைச் சந்திக்க நீங்கள் தயார் என்று முடிவெடுத்து, அதனை மகிழ்ச்சியோடு ஏற்றுக்கொள்ளுங்கள். இதை சிந்தித்துதான் நீங்கள் முடிவவ செய்ய வேண்டும். எல்லோருக்கும் பொதுவான ஒன்றை நீங்கள் உங்களுக்காக  நிர்ணயிக்க முடியாது.

     ஒரு தம்பதியின் 25-வது திருமண நாளில் நடந்தது இது. மணவாழ்க்கை எந்த நிலையிலிருந்தாலும் திருமணநாளைக் கொண்டாடியே தீரவேண்டியுள்ளது. இத்தனை ஆண்டுகள் எப்படியிருந்தீர்கள் என்பது ஒரு பொருட்டல்ல; ஆனால் திருமண நாளைக் கொண்டாடிவிட வேண்டும் இல்லையா? இந்த மனிதர் அழுது கொண்டிருந்தார். மனைவி சொன்னாள்:- "நம்ப முடியவில்லையே! நம் திருமணம் பற்றி இவ்வளவு உணர்ச்சிவசப்படுகிறீர்களே" என்று. கணவர் சொன்னார்:-" இல்லை ... உன் அப்பா ஒரு நீதிபதி. நான் உன்னுடன் சுற்றிக்கொண்டிருந்ததைப் பார்த்துவிட்டு நான் உன்னைத் திருமணம் செய்துகொள்ளாவிட்டால் என்மீது ஏதாவது வழக்குப் போட்டு 25 ஆண்டுகள் சிறையில் தள்ளிவிடுவேன் என்று மிரட்டினார். அதை நான் ஏற்றுக்கொண்டிருந்தால், எனக்கு இன்றோடு விடுதலை கிடைத்திருக்கும். சுதந்திர மனிதனாக இருந்திருப்பேன்" என்றார்.

     எங்கோ தவறு நடந்து எல்லாம் துயராயம் ஆகிவிடுகிறது. அதற்காக திருமணமே தவறு என்று பொருளல்ல. அது இரண்டுபேர் ஒருவிதமான பகிர்தலோடு வாழ்க்கையை வாழ்வதற்கான ஒரு வாய்ப்பு. அது வாழ்வதற்கான ஒரு நல்ல வழி. அதன்மூலம் அற்புதமான ஒரு வாழ்க்கை முறையை அமைத்துக்கொள்ள முடியும். ஆனால் போதிய மனமுதிர்ச்சியில்லாதவர்கள் அளவுக்கதிகமான பற்றுதலை வளர்த்துக்கொண்டு, ஒருவரையொருவர் பயன்படுத்திக்கொள்ள முனைந்தால திருமணம் தோல்வியடையும். நீதிமன்றம் வரை போகாவிட்டாலும, தனி வாழ்க்கையிலாவது தோல்வியிருக்கும்.

     நீங்கள் எதுவுமே அறியாத முட்டாளாக இருந்தால் சாதாரணமாக வாழ்ந்து கொண்டிருக்கலாம். அல்லது உங்கள் வாழ்க்கைத் துணைவரிடம் முழுமையாகச் சரணடைந்திருந்தாலும் சிக்கலில்லை. அல்லது இருவருக்குள் எது நடந்தாலும் அதை அற்புதமாக உணருமளவுக்கு மிகுந்த அன்புடன் வாழ்ந்தாலும் சரி; இல்லையென்றால் திருமண வாழ்க்கை சாத்தியமேயில்லை. சமூகப் பொறுப்புகள் கருதி இரண்டுபேர் ஒட்டுதல் இல்லாமல் ஒன்றாக வாழ்வது பைத்தியகாரத்தனம். அவர்கள் ஒருவர் வாழ்வை ஒருவர் சிதைத்துக் கொண்டிருக்கிறார்கள் என்றுதான் அர்த்தம்.

     ஆண்கள், பெண்கள் இருவருக்குமே இது பொருந்தும். இளமையில் அவர்கள் உயிரோட்டம் உள்ளவர்களாக இருக்கிறார்கள். திருமணத்திற்குப் பின் கதையே வேறு. கல்லூரிகளில் கூட பார்த்திருக்கிறேன். இந்தக் காதலர்கள் ஒருவருக்காக ஒருவர் பிறந்ததுபோல் எண்ணுகிறார்கள். பெரும் எதிர்ப்ல்புகளுக்கு மத்தியில் திருமணம் செய்ய்து கொள்ளுகிறார்கள். பெற்றோரை எதிர்த்து சமூகத்தை எதிர்த்து திருமணம் நடந்தேருகிறது. உற்சாகமும், உயிரோட்டமுமாய் இருந்த இவர்கள் திருமணமாகி ஐந்தாறு வருடங்களிலேயே துன்ப்ல்லமயமாகி விடுகிறார்கள். அவர்கள் முகத்தில் சோகம் கவிழ்ந்திருக்கிறது. உயிரோட்டம் காணாமல் போய் விடுகிறது. இத்தகையவர்களைப் பார்ப்பதே துயரமானது. அந்த உறவை ஒரு கட்டமைப்புக்குள் கொண்டு வந்து, அதை மூலதனமாகப் பார்க்கத் தொடங்கும்போதே வாழ்க்கை அர்த்தமற்றுப் போய்விடுகிறது.

     யாரையாவது நீங்கள் நேசித்தால் அதை ஒரு முதலீடாக மாற்ற நினைக்கிறீர்கள் இல்லையா? ஏன்? அதிலிருந்து அனைத்து விதமான பாதுகாப்புகளையும் பெறமுடியும். ஆனால், அந்த உறவின் சாரம் அத்தோடு முடிந்துவிடுகிறது. அந்த் நேசத்தைப் பயன்படுத்தி, எதையாவது பெற முயற்சி செய்தீர்களேயானால், அங்கே நநசம் அழிந்துவிடும். பெற்றுக்கொள்கிற விஷயம் மட்டுமே இருக்கும். துரதிர்ஷ்டவசமாக இதை செய்ய எல்லோருமே முயற்சிக்கிறார்கள். அதற்கென ஒரு பெரிய விலை கொடுக்க நேர்ந்தாலும் யாரும் அதுபற்றிப் புரிந்துகொள்வதில்லை. அப்படட கொடுக்கக்கூடிய பெரிய விலை உங்கள் வருத்தமும் துயரமும் தான். இதனால் உங்களது நேசத்தை இழக்கிறீர்கள். அதிலிருக்கிற ஆனந்தத்தையே இழக்கிறீர்கள். நேசத்தையே இழந்தபிறகு வேறு என்ன விலை கொடுக்க முடியும். இதைவிட நரகம் உண்டா என்ன? குறைந்தது கல்லூரிக் காலங்களில் ஏற்பட்ட காதல் அனுபவங்களை நினவுகூர்ந்தால் அது ஆனந்தத்திற்கு ஒரு மூலமாக இருந்திருக்கும் இல்லையா? ஆனால் உங்கள் கனவுகள் நனவானபோது அதை வியாபாரமாக்க முயற்சித்தீர்கள். உங்கள் வாழ்விலே ஒரு அற்புதமான மனிதர் என்று நினைத்தவர் மிக மோசமான மனிதராக ஆகிவிட்டால்? இப்படி நிகழ்வ்து மிகவும் துரதிர்ஷ்டவசமானது. ஆனால் தலைமுறை தலைமுறையாக இது இப்படித்தான் ஆகிக் கொண்டிருக்கிறது.

     இதுதான் மாறுவதற்கான நேரம். உங்களை நீங்களே மாற்றிக்கொள்ள உங்களுக்கு இது வேண்டும், அது வேண்டாம் என்பதை நீங்கள் தீர்க்கமாக முடிவு செய்ய இதுதான் உகந்த நேரம்.