பிற கிரகங்களுக்கு எளிதான பயணம்-2

புற உலக விவரணம்
ஸ்தூல உலகாயதவாதிகளின் சிந்தைக்கெட்டாமல் அவர்களைக் குழப்பிவந்த புற உலகினைப் பற்றிய விவரங்களை பெளதிக விஞ்ஞானிகள் ஒரு நாள் கண்டுபிடிக்கலாம். விஞ்ஞானிகளின் 'சேதனத்தைப்' பற்றிய இன்றைய எண்ணங்களைப் பற்றி, 'Times of India'(oct27,1959) கீழ்வருமாறு வெளியிட்டது:
"ஸ்டாக்ஹோல்ம்: அக்.26,'59-- இரண்டு அமெரிக்க அணு விஞ்ஞானிகளுக்கு இன்று 1959'ம் ஆண்டின் நோபல்பரிசி அளிக்கப்பட்டது. இவர்கள் 'ஆண்டிபுரோட்டான்' எனும் பொருளைக் கண்டறிந்துள்ளனர். இதன்மூலமாக ஜடப்பொருள்கள் இருவிதமான உருவங்களில் - துணுக்குகள் - எதிர்த்துணுக்குகள் - அமைகின்றன என்பது நிரூபிக்கப்படுகின்றது; டாக்டர் எமில்லோ செகர் எனும் இத்தாலியரும், டாக்டர் ஓவன் சாம்பெர்லின் எனும் சான்பிரான்சிஸ்கோ வாசியும் ஆன இவர்களது புதிய கண்டுபிடிப்பின் ஆதார தத்துவங்களின் படி, இவ்வுககுக்குப் புறம்பே, பெளதிகத் தத்துவங்களால் அல்லாது ஆக்கப்பட்ட சில உலகங்கள் இருப்பது சாத்தியம் என்று எண்ணப்படுகின்றது. இவ்வுலகின் அணுக்களும், உப அணுக்களை உடையதாக இப்புறவுலகு இருக்கலாம் என்று எண்ணப்படுகின்றது. இந்த இரு உலகங்களும் எப்போதேனும் மோதுமேயானால் இவையிரண்டுமே ஒரே சமயத்தில் அழிய நேரலாம்."
மேற்கண்ட செய்தியில், பின்வரும் பிரேணனைகள் எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளன.
1. பெளதிக அணுக்களின் குணங்களுக்கு எதிரான குணங்களை உடைய எதிரணுக்கள்--ஜடமில்லாதவை உண்டு.
2. இவ்வுலகுக்கு வெளியே, நமது அனுபவத்திற்கு எட்டாத வேறு உலகங்களும் உண்டு.
3. இவ்விரு உலகங்களும் தமக்குள் மோதி ஒரு சமயம் அழியலாம்.

இந்த 3 விஷயங்களில் முதல் இரண்டை ஆத்திக மாணவர் ஒத்துக்கொள்ளலாம். ஆனால் மூன்றாவது, ஜடமல்லாப் பொருளின் விஞ்ஞான முடிவுகளின் எல்லைக்குள்ளே மட்டுமே நாம் ஒத்துக்கொள்ள முடியும்.
-----
பிற கிரகங்களுக்கு எளிதான பயணம்-3
பிற கிரகங்களுக்கு எளிதான பயணம்-1
-------

No comments: