பிற கிரகங்களுக்கு எளிதான பயணம்-3

இந்த விஞ்ஞான்னிகளின் கண்டுபிடிப்பானது பௌதிகப் பொருள்காளுக்கெதிரான எதிரணுக்களைக் கண்டறிந்த போதும், வேறுவிதமான ஒரு ஜடசக்தியைக் காணும்வரை சென்று நின்றுவிடுகிறதே ஒழிய, ஜடமல்லாத, பௌதிகத் தத்துவமேயல்லாதவற்றைக் காணவில்லை. ஜடப்பொருளானது இயல்பாகவே, அழியக்கூடிய தன்மையை கொண்டதாகும். ஜடத்தன்மையின் லட்சணங்க்கள் சிறிதுமற்ற பொருள், அழியும் தன்மையுமற்றதாக, இயற்கையிலேயே அமையவேண்டுமல்லவா?
ஜடமானது அழியக்கூடியதும், பிரிவுபடக்கூடியதுமாக இருக்க வேண்டும். நம்பகமான சாத்திரங்களின் பார்வையில் இந்த 'சேதன' தத்துவங்களைக் காண்போம்:-
இவ்வுலகின் மிகவும் அங்கீகாரமான நூற்கள் வேதங்களாகும். வேதங்கள் 4 பிரிவுகளை உடையன. ரிக், யஜுர், சாம, அதர்வ என்பன அப்பிரிவுகள். சாதாரண அறிவுகொண்டவர் புத்திக்கெட்டாத விஷயங்கள் இவ்வேதங்களில் அடங்கியுள்ளன. தெளிவாக விளக்கும் பொருட்டு வேதங்கள், மகாபாரதம் போன்ற காவியத்திலும், பதினெண் புராணங்களிலும் விரித்துரைக்கப்பட்டுள்ளன. இராமாயணமும் வேதங்களின் கருத்தை விளக்கும் ஒரு காவியமே. நான்கு வேதங்கள், வால்மீகியின் மூலராமாயணம், மகாபாரதம், புராணங்கள்- இவை வேதபுத்தகங்களாகும். உபநிஷதங்களும் வேத நூல்களின் பகுதியாகக் கருதப்படுகின்றன. வேதாந்த (சூத்திரங்கள்) வேதங்களின் சாரமாகும். இந்த வேத நூற்களையெல்லாம் சுருக்கித் தந்தாற்போன்ற பகவத் கீதை, உபநிஷதங்களின் கருத்துரையும், வேதாந்த சூத்திரங்களின் சுருக்கமான பொருளுரையும் போன்றது. வேதங்களின் முடிவான தத்துவங்களை அறிந்து கொள்ள விரும்பும் ஒருவர் கீதையைப் புரிந்து கொள்வது அவசியம். ஆன்மிக உலகிலிருந்து இறங்கிவந்து, பௌதிககத்திற்கப்பாற்பட்ட, தன் உன்னதமான சக்தியைப்பற்றி முழுவிவரம் கொடுப்பத்ற்காக பகவான் ஸ்ரீகிருஷ்ணரால் உபதேசம் செய்யப்பட்டதால் கீதை வேத நூற்களெல்லாவற்றின் மணிமுடியாகத் திகழ்கின்றது.
பரம புருஷனின் உன்னதமான சக்தியை 'பராப்ரக்ருதி' என்று கீதையில் வர்ணிக்கப்பட்டுள்ளது. அழிவுக்குட்பட்ட ஜடப்பொருள்களில் இருவகை உண்டென்றுதான் இன்று விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். ஆனால் கீதையோ, ஜடம், சேதனம் என்பவற்றை இருவகைச் சக்திகளாகப் பிரித்து விவரிக்கின்றது. பொருளென்பது ஜடநிலையில் பௌதிக உலகை உருவமைக்கின்றது, தனது உன்னத நிலையில் சேதன உலகை உருவாக்குகின்றது.
உயிர்கள் உயர்சக்தியைச் சேர்ந்தவை. கீழ்ச்சக்தியான பௌதிக சக்தி, 'அபராசக்தி' என்றழைக்கப்படுகின்றது. பகவத்கீதை இவ்விதமாக 'பரா', அபரா' என்று சிருஷ்டி சக்தியை இருவிதமாக விளக்குகிறது.
-----
பிற கிரகங்களுக்கு எளிதான பயணம்-4
பிற கிரகங்களுக்கு எளிதான பயணம்-2
பிற கிரகங்களுக்கு எளிதான பயணம்-1
-----

No comments: