24 தத்துவங்கள்

பிரகிருதியிலிருந்து அஹம்காரம், அதிலிருந்து மகத் என்கிற புத்தி, பிறகு மனம் உண்டாகின்றன. மனத்திலிருந்து ஐந்து தன்மாத்திரைகள் என்ற சூக்ஷ்ம பூதங்கள், ஐந்து ஸ்தூல பூதங்கள், அவைகளினால் ஐம்புலன்களும் இவற்றின் வெளித் தொடர்புக்கென ஐம்பொறிகளும் பிறக்கின்றன.
சம்சாரம் அல்லது சம்பந்தப்பட்ட வாழ்க்கை இப்படிப் பிரிந்த பிரகிருதியால் புருஷனுக்கு சுக துக்க வாழ்க்கையாக உலகில் வாய்க்கிறது.

இதைத் தொலைக்கும் வழி
1. உலகில் துன்பம் உள்ளது
2. துன்பத்திற்கான காரணம் உள்ளது.
3. இந்தத் துன்பத்தை போக்க முடியும்.
4. அதற்கான வழி இருக்கின்றது.
ஆரம்பத்திலிருந்து, சம்சாரம் எப்படி ஏற்பட்டதோ அதே வழியில் திரும்பிச் சென்று தன்னறிவு பெறுவது தான் அது. ஏறக்குறைய எல்லா மதங்களுமே, உண்மையையோ, கடவுளையோ தேடித் திரும்பிச் செல்வது தான்.
அதன்படி, பொறிகளை, புலன்களை, இயம நியமங்களால் அடக்கி, ஆசன, பிராணாயாமத்தால் உடலை நேர் செய்து, மனத்தை பிரத்யாஹாரத்தால் விஷயங்களிலிருந்து மீட்டு, ஒன்றில் குவித்து, அதையே தியானமாக்கி, சமாதியடைந்து, பிரகிருதியில் பிரதிபலிக்கும் புருஷனைத் தனியாக அறிந்து, விருத்திகளைப் பூரணமாக ஒடுக்கி, ஐந்தாவது மன நிலையான நிருத்தத்தை அடைந்து, ராக த்வேஷம் முதலிய வாசனைகளை ஒழித்து, வழியில் கிட்டும் அற்புத ஆற்றல்களையும் மதியாமல் பேரமைதியைப் பெற வேண்டும். இதை சாதிக்க, தத்வக்யானம் என்ற விவேகக்யாதிக்காக, அப்யாசம், வைராக்கியம் என்ற இரண்டு சிறகுகளால் பறக்க வேண்டும். இதற்கு அடிப்படை புருஷனின் சொந்த முயற்சி, செய்யும்போது, ஈஸ்வரனைப் பணிந்து யோகம் பழக வேண்டும். இது உபாயம் அல்லது சாதனமாகும்.

No comments: