மதங்கள் அவசியமா?

'மதங்களே வேண்டாம்' என்பதும் ' எல்லா மதங்களையும் ஒரே மதமாக்குவோம்' என்பதும் வேண்டாத வேலை. முடியாததும், குழப்பத்தை விளைவிப்பதும் ஆகும்.

'ஏன் பிறக்கிறோம்?
ஏன் சாகிறோம்?
எது நமது ஆரம்பம்?
எங்கே நமது முடிவு?
நம்மைச் சுற்றி இருப்பது என்ன? நமக்கும் நாமிருக்கும் இடத்திற்கும் என்ன தொடர்பு?
நோய், துன்பம், மரணம் இவைகளிலிருந்து நம்மால் மீளவே முடியாதா?' என்ற சிந்தனையிலிருந்து பிறந்தது தான் 'மதம்'. அந்த சிந்தனையின் தீர்மானமாக முடிந்ததுதான் கடவுள்.
சிறுதுளியான ஜீவன், எல்லாமான கடவுளை நோக்கி பயணம் செய்ய சரியாகப் போடப்பட்ட பாதையே மதம். சில பாதைகள் கடவுளிடம் முடியும், சில தொலைவிலேயே முடிந்து விடலாம். ஒரு பாதையிலே நடந்தவன் உண்மை நாட்டம் உடையவனானால் பக்குவப்பட பட சரியான பாதையை பிடித்து வந்து சேர்ந்து விடுவான்.
ஒரே ஊருக்குச் செல்ல வேண்டியவர்கள் அவரவர் இருக்கும் இடத்திலிருந்துதான் புறப்பட முடியும்.
ஆனால் இந்த 'யோக வழி'க்குள்ள சிறப்பு என்னவென்றால், இது எல்லா மதங்களும் கடைபிடிக்கக் கூடியது. யாவருக்கும் பொதுவானது.
யோகம் பழக யாரும் மதம் மாறத்தேவையில்லை.
எல்லா மதத்திலும் இருக்கும் சிறப்பான முறைகள் இதில் இருக்கின்றன. பொதுவாக, 'யோக'த்தை 'மதம்' எனச் சொல்லத் தேவையில்லை. இன்னும் சொல்லப்போனால் யோகம் எந்த மதத்தினையும் சார்ந்ததோ அல்லது மதத்தின் கூறோ அல்ல.

No comments: