சுவையான சம்பவங்கள்

ஒரு சமயம் பதஞ்சலி முனிவர் தமது ஆயிரம் மாணவர்களுக்கு 'வித்தை' சொல்லிக்கொண்டிருந்தார். மாணவர் ஆயிரம் பேர் என்பதால், தமது ஆயிரம் தலை அனந்தவடிவத்தோடு பாடம் சொன்னார். மூச்சுக் காற்றாலும், பார்வையாலும் மாணவர் மாண்டுவிடக்கூடாது என, நடுவில் ஓர் திரை இட்டுக்கொண்டார். யாரும் தம்மைத் திரையை விலக்கிப் பார்க்கக் கூடாது என்பதும், பாட நடுவில் சொல்லாமல் வெளியே செல்லக்கூடாது என்பதும், அவர் இட்ட நிபந்தனைகள். மந்தமான ஒரு மாணவர், பாடம் சலிப்பாக இருக்கவே எழுந்து யாருமறியாமல் வெளிச்சென்று விட்டார். ஆச்சரியமான முறையில் போதிக்கும் குருவைப் பார்க்கும் ஆவலில் ஒருவர் திரையை விலக்கினார்.
பதஞ்சலியின் பார்வை, மூச்சால் அங்கிருந்த அனைவரும் மாண்டு விட்டனர். அச்சமயம், வெளிச்சென்றிருந்தவர் உள்ளே வரவே, வித்தையைக் காக்க ஒருவராவது எஞ்சியிருக்கிறாரே என்று அவரிடம் தமது வித்தையை கொடுத்தபின், சொல்லாமல் வெளிச்சென்ற குற்றத்திற்காக அவரை பிரம்ம ராட்சஸாக சபித்தார்.
ஸ்ரீ இராமனுஜரின் வாழ்க்கையிலும் இதுபோலவே நடந்துள்ளது குறிப்பிடத்தக்கது. அவரும் ஆதிசேஷனின் அவதாரம் என்பதால்,
'திருமிடறு புழுத்தான்' என்று வரலாற்றில் அவப்பெயர் பெற்ற குலோத்துங்க சோழ மன்னன் ஆட்சியில் மேனாடு (மேல் நாடு) என்று வழங்கப் பெற்ற மைசூருக்கு வந்திருந்த இராமானுஜர், மன்னனின் மகளுக்குளிருந்த பேயை விரட்டினார். ஆகவே மகிழ்ந்த மன்னன் இராமனுஜரைப் பின்பற்ற முடிவு கொண்டான்.
அதுவரை அம்மன்னன் பின்பற்றி வந்த சமணர்கள் பன்னீராயிரவர் (12000 பேர்) சினமுற்று ஒரே சமயத்தில் இராமானுஜருடன் வாதத்திற்கு வந்தனர். அப்போது தம் முன்னால் ஒரு திரையை இட்டுக்கொண்டு அனைவருடனும் இராமானுஜர் ஏக காலத்தில் ஆதிசேஷனான தம் உருவத்தில் வாதிட்டு வென்றார்.

No comments: