சிவ திருத்தலங்களும் தோஷ பரிகாரங்களும்

1. திருக்கச்சி ஏகம்பம்
காஞ்சிபுரத்தில் இருக்கும் மிக பழைய கோவில் காசிக்கு சமமாக கருதப்படுகிறது. இத்தலத்திற்கு மாமரமே தலமரம். இம்மரத்திற்கு நான்கு கிளைகள் உண்டு. கீழே விழும் கனிகளும் நான்குவித சுவை உடையதாகச் சொல்லப்படுகிறது. இம்மரம் வேதத்தைக் குறிக்கும். கிளைகள் நான்கு பிரிவினை குறிக்கின்றன. இதன் வயது ஏறக்குறைய 3600 ஆண்டுகளுக்கும் மேல் என்று சொல்லப்படுகின்றது. தவம் செய்த தேவிக்கு இங்கு தான் காட்சி கிடைக்கப் பெற்றதாக வரலாறு. எனவே இத்தலத்தில் இம்மரத்தின் அருகே உள்ள பிரகாரத்தில் கச்சி ஏகம்பனை நினைத்து மனஞபம் செய்தால் இப்பிரார்த்தனையை இறைவன் ஏற்றுக் கொண்டு நன்மையை நல்குவார் என்பது வழக்கு.

2. மாகறல்
காஞ்சி – உத்திரமேரூர் பேருந்து சாலையில் உள்ளது. இத்தலம் முற்காலத்தில் அங்கபிரதட்சணம் செய்து குழந்தையில்லாதவர் குறை நீக்கப் பெற்று மகப்பேறு பெற்றனர் என்பது வரலாறு. திருமாறகலீசுவரர் இங்கு இறைவன். இவரை வணங்கி வழிபட்டால் மகப்பேறு பாக்கியம் நிச்சயம்.

3. திருவலிதாயம்
சென்னை ஆவடி சாலையில் உள்ள பாடி என்பதே திருவலிதாயம் ஆகும். இங்குள்ள வல்லீசுவரர் உடலில் நவகிரக குரு என்னும் தேவ குருவை ஏற்றுக் கொண்டவர். எனவே குரு கிரகத்தால் ஏற்படும் தீமைகள் குறைந்திடவும் குருவின் அனுக்கிரகம் கிட்டிடவும் இத்தலத்தின் இறைவனை வணங்கிடல் நலம்.

4. திருவான்மியூர்
சென்னையில் உள்ளது. பேருந்து வசதி உண்டு. உடல் சார்ந்த தொல்லைகள் தீர இங்கு எழுந்தருளியிருக்கும் திருமருந்தீசர் இறைவனை வணங்கி வழிபடுதல் நலம் பயக்கும்.

5. திருகாளத்தி
ஆந்திர மாநிலத்தில் உள்ளது. சென்னை காஞ்சியிலிருந்து பேருந்து வசதிகள் உண்டு.
பஞ்ச பூதத்தலங்களுள் இது வாயுத்தலம். திருகண்ணப்ப நாயனார் முக்தி பெற்ற தலம்.
இது முக்கியமாக இராகு, கேது தோச பரிகாரத்திற்கு உரிய தலமாகும். எனவே இராகு கால தரிசனமும் சாந்தியும் முக்கியம். கோயில் அமைப்பும் எதிர்வலம் கொண்டிருக்க இரகு கிரகத்திற்கு சிறந்த தலம் என்பது புலனாகும். மேலும் இங்கு எழுந்தருளியிருக்கும் திருக்காளத்திநாதர் பெற்ற கவசத்தில் நவக்கிரகங்கள் அங்கம் வகிக்கும் நவக்கிரக தோஷ நிவர்த்திக்கும் ஏற்ற தலமாகும்.
மற்றும் இங்கு வழிபாடு செய்வது மிக விசேஷமாகும். எனவே இராகு, கேது மூலம் திருமணத்தடைக்கு, உட்பட்டவர்களும், நாகதோஷம் கொண்டு புத்திர தோஷம் உள்ளவர்களும், ராகு திசை நடக்கும்போது ஏற்படும் தீமைகள் நீங்கவும், கோச்சாரத்தில் 8-ம் வீட்டில் இராகு சஞ்சரிக்க ஏற்படும் தீமைகள் நீங்கிடவும், மாங்கல்ய பலகீனம் உடைய பெண்களும் இங்கு வழிபடுதல் நலம்.

ஹோம மந்திரங்களும் - ஹோமத்தின் பலன்களும்:



1. ஸ்ரீ சக்தி பஞ்சாக்ஷரீ – சகல யோகமும் சௌபாக்யமும் உண்டாக.
2. சுத்த பஞ்சாக்ஷரீ – மனோரத இஷ்ட காம்யார்த்த அபிலாக்ஷைகள் நிறைவேற.
3. சிவ அஷ்டாக்ஷரீ - ஸர்வ சத்ரு, மிருக, ரோக உபாதிகள் நீங்க.
4. சிவ பஞ்ச தசாக்ஷரீ – அஷ்ட ஐஸ்வர்யப் பிராப்தி அடைய.
5. சிதம்பர பஞ்சாக்ஷரீ – ஞான வைராக்யம், சிவ கடாக்ஷம் பெற.
6. குரு தாரக பஞ்சாக்ஷரீ – ஸகல ஜன வசீகரணம், ராஜாங்க வெற்றி, தேவதா ப்ரீதி உண்டாக.
7. ம்ருத்யுஞ்ஜய த்ரயக்ஷரீ – அகால, அபம்ருத்யு பயம் நீங்க, ஆயுள் விருத்தியடைய.
8. சிதம்பர சபாநடன மந்த்ரம் – அனைத்து பாப தோஷ பரிகாரம், ரக்ஷா பந்தனம்.
9. நீலகண்ட மந்த்ரம் – எதிர்பாராத கொடிய ஆபத்தினின்று மீளல், தவிர்த்துக் கொள்ள.
10. மஹா நீலகண்ட மந்த்ரம் – பூதப்பிரேத பிசாச உபத்ரவம், ஸர்வாரிஷ்டம் நிவாரணம்.
11. த்வனி மந்த்ரம் – மன சாந்தி, சந்தி, சந்துஷ்டி, சிவானந்த அநுபூதி பெற.
12. சிவ காயத்ரீ – நினைவுத்திறன், சமயோசித புத்தி, புதிய யுக்தி, வாக்சாதூர்யம் கூட.
13. மார்கதர்சீ சிவ மந்த்ரம் – பிரயாண சௌகர்யம், எவ்வித ஆபத்துகளும் விபத்துகளும் நேராதிருக்க.
14. ருணமோசன சிவ மந்த்ரம் – கடன் நீங்க, தேவ, பித்ரு ரிஷி கடன் அடைதல், பணவரவு, சேகரிப்பு அதிகரிக்க.
15. பசுபதி காயத்ரீ – ஸகல வித திருஷ்டி விலக, வழக்கில் வெற்றி, குடும்ப மகிழ்ச்சி ஏற்பட.
16. சிவ நவாக்ஷரீ - கார்யா தடைகள், தேக்கநிலை தீர்வு, நிர்வாகத் திறன் கூடுதல், புது முயற்சிகள் பலிதம்.
17. பாசுபதாஸ்த்ரம் – பூதப்பிரேத பிசாச உபத்ரவம், ஸர்வாரிஷ்டம் நிவாரணம், ஆபிசார தோஷம், செய்வினைகள் அகல.
18. ருத்ர காயத்ரீ – பாப தோஷ விமோசனம், நிரந்தர ஜயம்.
19. வித்யாப்ரத சிவமந்த்ரம் – புத்திகூர்மை, மேதா விலாஸம், சொல் வசீகரணம், ஸரஸ்வதி கடாக்ஷம் பெற.
20. உமாமஹேஸ்வர மந்த்ரம் – குடும்ப ஒற்றுமை அன்யோன்யம், மட்டற்ற மகிழ்ச்சி, குதூகலம் பெற.
21. ஆபத்துத்தாரக கௌரீவல்லப மந்த்ரம் – எல்லா ஆபத்துக்களும் தடைகளும் நீங்கி, நிரந்தர ஜயம் உண்டாக.
22. ஸர்வபாபஹர பவ மந்த்ரம் – அனைத்து பாப தோஷங்களும், அனாசார பாதிப்பும் விலகுதல்.
23. ரக்ஷாப்ரத கௌரீ சிவ மந்த்ரம் – சீரான உடல் நலம், முகப்பொலிவு, மறுமலர்ச்சி, ஆரோக்கியம் கூடுதல்.
24. ம்ருத் ஸஞ்சீவினி – அகால, அபம்ருத்யு பயம் நீங்கல், ஆயுள் விருத்தி.
25. பஞ்சதசீ சிவ மந்த்ரம் – ஸகல கார்ய சித்தி, செயற்கரிய செயல் செய்தல், வாழ்வில் ஏற்றம்.
26. சுதர்ஸன மந்த்ரம் – செய்வினை, சத்ருக்களின் தொல்லை, வியாபாரத் தடை நீங்குதல், மனச்சாந்தி அடைய.
27. லக்ஷ்மி ந்ருஸிம்ஹ மந்த்ரம் – பணவரவு, கடன் நிவாரணம், பணப்புழக்கம், குடும்ப மகிழ்ச்சி.
28. சுதர்ஸன நரஸிம்ஹ மந்த்ரம் – எதிரிகள் தொல்லை, வழக்கு வியாஜ்யம், குடும்ப-தொழில் குழப்பங்கள் நீங்க.
29. வாஸுதேவ மந்த்ரம் – வறுமை, கிலேசம், சந்தேகம், தீவினைகள் அகன்று இம்மை மறுமை நலன்கள் கொழிக்க.
30. விஸ்வரூப மந்த்ரம் – சதுர்வித புருஷார்த்தங்கள், மனோபலம், ஜயம், அசைகள் பூர்த்தியாக.
31. கந்தர்வராஜ மந்த்ரம் – தடை நீங்கி திருமணம், குடும்ப சூழ்நிலைச் சிக்கல்கள் நிவர்த்தி, சுப கார்யங்கள் நடைபெற.
32. ஹயக்ரீவ மந்த்ரம் – புத்தியும் சக்தியும் தூண்டப்படுதல், கல்வியில் ஏற்றம், மஹாவித்வத்வம், இனிய சொல் மெய்யுணர்வு.
33. நாமத்ரயம் – அனைத்து பாப விமோசனம், சுமுக சூழ்நிலை ஏற்பட.
34. சுதர்ஸன அபரோ மந்த்ரம் – ரக்ஷா ப்ரதானம், அடிமன பயம் நீங்குதல், மனநிறைவு, நிம்மதி.
35. நரஸிம்ஹ மந்த்ரம் – பணவரவு, கடன் நிவாரணம், பணப்புழக்கம், குடும்ப மகிழ்ச்சி, நோய் வறுமை நீங்கி ஸகல சம்பத்துகள் அடைய.
36. கருட மந்த்ரம் – விஷம், ஸர்ப்ப தோஷம், துஷ்ட மிருக பயம் விலக.
37. மஹா கருட மந்த்ரம் - அதைர்யம், பாபம், விஷக்ரஹ தோஷங்கள், துஷ்டர் பயம் ஆகியன விலக.
38. தன்வந்த்ரீ மந்த்ரம் – முதுமை, நோய், பய உணர்ச்சி அகன்று யௌவனம், தைர்யம், தேகஒளி, தீர்க்காயுஸ், ரோகமின்மை ஏற்பட.
39. கருட காயத்ரீ மந்த்ரம் – தாமதம் நீங்கி எண்ணிய காரியம் முடிதல், சீக்ர கார்யசித்தி பெற.
40. சுதர்ஸன காயத்ரீ மந்த்ரம் – ஞானம், சக்தி, பலம், ஐஸ்வர்யம், வீர்யம், தேஜஸ் பெற்று சௌகர்யம் ஏற்பட.
41. தன்வந்த்ரீ காயத்ரீ மந்த்ரம் – முதுமை, நோய், பய உணர்ச்சி அகன்று யௌவனம், தைர்யம், தேகஒளி, தீர்க்காயுஸ், ரோகமின்மை, மன்மதஸ்வரூபம் ஏற்பட.
42. வித்யா கோபால மந்த்ரம் – வித்யா பிராப்தி, நினைவாற்றல், வாக்குவன்மை, மேதா விலாசம் கூடுதல்.
43. அன்ன கோபால மந்த்ரம் – அன்னபானாதி சம்விருத்தி, தன்னிறைவு பெற.
44. சௌபாக்யலக்ஷ்மீ மந்த்ரம் – லக்ஷ்மி கடாக்ஷம், தாபத்ரய நிவர்த்தி, அஞ்ஞான நிவர்த்தி.
45. க்ஷேத்ர ப்ராப்திகர மந்த்ரம் – பூமி லாபம், குபேர சம்பத்து ஸ்திர லாபம் பெற.
46. க்ஷேத்ர ப்ராப்திகர அபேரா மந்த்ரம் – இந்த்ர பதவி, பொன் விளையும் பூமிக்கு அதிபதி, லோக பிரசித்தி, ஸ்திரத்தன்மை அடைய.
47. த்ருஷ்டி துர்கா மந்த்ரம் – ஸர்வ திருஷ்டி தோஷ பரிகாரம், முன்னேற்றம்.


ஹரிஹர மந்த்ரம்
“ஓம் ஓம் நமசிவாய ஓம் நமோ நாராயணாய
ஓம் நமோ நாரயணாய ஓம் ஓம் நமசிவாய”