ஸ்ரீ தக்ஷிணாமூர்த்தி வழிபாடு-1

குரு
சிவபெருமானுடைய திருவுருவங்கள் போக வடிவம், யோக வடிவம், வேக வடிவம் என்ற மூன்று வகைப்படும். 
இந்த மூன்று வடிவங்களுள் யோக வடிவம் தாங்கியவர் தக்ஷிணாமூர்த்தி.

தக்ஷிணாமூர்த்தி சதாசிவ மூத்தியும் ஐந்து திருமுகங்களில் ஒன்றான் அகோர முகத்திலிருந்து தோன்றியவர். 

சதாசிவ மூர்த்தியின் ஐந்து திருமுகங்கள்: 
1. ஈசானம், 
2. தத்புருஷம், 
3. அகோரம், 
4. வாமதேவம், 
5. சத்யோஜாதம்  என்பவைகளாகும்.

ஈசான முகத்திலிருந்து சோமாஸ்கந்தர், நடராஜர், ரிஷபாரூடர், கல்யாணசுந்தரர், சந்திரசேகரர் ஆகிய திருவுருவங்கள் தோன்றின.

தத்புருஷ முகத்திலிருந்து பிட்சாடனர், காமாரி, காலாரி, சலந்தராரி, திரிபுரசுந்தரர் ஆகிய திருவுருவங்கள் தோன்றின.

அகோர முகத்திலிருந்து கஜசம்ஹாரர், வீரபத்திரர், தக்ஷிணாமூர்த்தி, கிராதமூர்த்தி, விஷாபஹரணர் ஆகிய திருவுருவங்கள் தோன்றின.

வாமதேவ முகத்திலிருந்து கங்காளர், சக்ரதானர், கஜாந்திகர், சண்டேச அனுக்கிரகர், ஏகபாதர் ஆகிய திருவுருவங்கள் தோன்றின.

சத்யோதஜாத முகத்திலிருந்து லிங்கோத்பவர், சுகாசனர், உமாமஹேசர், ஹரிஹரர், அர்த்தநாரி ஆகிய திருவுருவங்கள் தோன்றின.

No comments: